விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்!
பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று சசிகலா புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் பெயரை கூறாமல், கட்சியின் கொடியை மட்டும் வெளியிட்டார். அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் நடுவில் இருக்க கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கட்சியின் பெயரை வெளியிட்டிருக்கிறார்.
அனங்காபுத்தூர் ராமலிங்கம் என்பவர் தொடங்கிய அதிமுகவில் எப்படி எம்ஜிஆர் இணைந்தாரோ, அதே பாணியை சசிகலாவும் பின்பற்றி இருக்கிறார். இதையடுத்து கட்சியின் பெயராக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்று அறிவித்தார். இதன்பின் அஇபுதமமுகவுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்பின் சசிகலா பேசுகையில், நான் தர மரமாக வரவில்லை.. தோப்பாகவே வந்துள்ளேன். எப்போதும் மக்களுடன் தான் இருப்பேன் என்பதற்கு இந்த சின்னமே சாட்சி என்று தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவேன். தென்னந்தோப்பு சின்னத்தை வைத்து வைத்து கூட்டணியில்லாமல் வர மாட்டேன்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகுகிறதா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது செங்கோட்டையனுக்காக சசிகலா பேசி இருந்தார். இதனால் செங்கோட்டையன் மூலமாக தவெக உடனான கூட்டணியில் சசிகலா தரப்பு இணையும் என்று கருதப்படுகிறது.
சிறையில் இருந்து வெளி வந்தபின் பெரியளவில் அரசியலில் நடவடிக்கைகளில் சசிகலா ஈடுபடவில்லை. ஆனால் சட்டசபைத் தேர்தல் நெருங்கிய பின் திடீரென புதிய கட்சி, சின்னம் என்று தீவிரமாக செயல்பட தொடங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இந்தக் கட்சிக்கு கட்டமைப்பு இல்லையென்றாலும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள் பலரையும் சசிகலாவால் தவெக கூட்டணி பக்கம் கொண்டு வர முடியும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications