ஜெ. பேசிய வீடியோ பதிவை என்னிடம் கேட்ட திமுக.. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க தயார்.. சசிகலா
சென்னை: எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். அந்த வீடியோவை மட்டும் கொடுத்திடுங்க என திமுக தன்னிடம் பேரம் பேசியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் முதன்முதலாக உலகத் தமிழ் மாநாட்டில்தான் ஜெயலலிதாவை பார்த்தேன். அப்போது சென்னையில் யாரும் வீடியோ கவரேஜ் செய்யவில்லை.
நாங்கள் 200 டிவி வைத்து வீடியோ கவரேஜ் செய்தோம். அப்போது மாவட்டங்களில் வீடியோ பதிவு செய்யும் பணியை அதிமுக எங்களுக்கு வழங்கியது. ஜெயலலிதாவுக்கு எங்களுடைய வீடியோ பதிவு மிகவும் பிடித்திருந்தது.

ஜெயலலிதா
அப்போது கட்சியிலிருந்த துரை என்பவர் எங்கள் வீட்டுக்கு வந்து ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளையும் நீங்கள் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது தெற்கு ஆற்காடு ஆட்சியராக இருந்த சந்திரலேகாவும் ஜெயலலிதாவும் எங்கள் நிறுவனத்தின் வீடியோவை பார்த்துள்ளனர்.

ஆட்சியர் சந்திரலேகா
அப்போது சந்திரலேகா, இந்த வீடியோவை பதிவு செய்தவர் எனது நண்பர் சசிகலாதான் என தெரிவித்துள்ளார். அப்போது கன்னியாகுமரியில் ஜெயலலிதா பேசிய ஏதோ ஒரு விஷயம் சர்ச்சையாகியது. அதையடுத்து திமுகவிலிருந்து என்னை தொடர்பு கொண்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்.

சந்தேகம்
அந்த வீடியோவை எங்களுக்கு தாருங்கள் என கேட்டனர். இதனால் எனக்கு சந்தேகம் வந்து, வீடியோவை கட்சி ஆட்களிடம் கொடுத்து ஜெயலலிதாவிடம் சேர்க்க சொன்னேன். இதனால் ஜெயலலிதா என்னை பார்க்க வேண்டும் என போனில் கூறினார். வாகனம் அனுப்பினார், நானும் அவரை போயஸ் கார்டனில் போய் பார்த்தேன்.

ஈர்ப்பு
அவரது படுக்கை அறையில் குவிந்து கிடக்கும் கடிதங்களை படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது சீன்சியாரிட்டி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்கு எனது நட்பு ஆறுதலை அளித்தது என்றார்.












Click it and Unblock the Notifications