வெள்ள பாதிப்புகளை பார்க்க வாங்க... அவங்க வெலவெலக்கட்டும்- சசிகலாவுக்கு தூபம் போடும் ஆதரவாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களை பதம் பார்த்திருக்கும் மழை வெள்ளத்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் அரசியல் கட்சிகளை மிஞ்சவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது வெள்ள பாதிப்புகளை பார்வையிட சசிகலா வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனராம்.

வடகிழக்கு பருவமழையால் கடுமையான வெள்ளத்தால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னை மாநகரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விசிட் அடித்து தேவையான மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக போர்க்கால நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார் ஸ்டாலின். அனைத்து அரசு இயந்திரங்களும் முழு வீச்சில் களத்தில் செயல்பட்டு வருகின்றன.

அதிமுக- திமுக

அதிமுக- திமுக

இந்த நிலையில், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விசிட் அடித்தன. அதிமுகவைப் பொறுத்தவரையில் தங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டதாக தம்பட்டம் அடிக்கின்றனர். இதற்கு திமுக பதிலடி கொடுக்கிறது. குறிப்பாக 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு பேரழிவை சுட்டிக் காட்டியே அதிமுகவினர் வாயை அடைத்துவிடுகின்றனர் திமுகவினர்.

Recommended Video

    நினைத்ததை விட வேகமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி
    சசிகலாவுக்கு அழைப்பு

    சசிகலாவுக்கு அழைப்பு

    பாஜக தலைவர் அண்ணாமலையின் போட் பயணம் பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. இந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சசிகலாவை அவரது ஆதரவு அதிமுகவினர் பலரும் அழைத்திருக்கிறார்கள். மக்களிடம் இதனால் நெருக்கம் உருவாகும் என்றும், நீங்க இருக்கும் தி.நகர் பகுதியின் நிலைமை என்ன என்பதை அனுபவ ரீதியாக மக்களிடத்தில் சொன்னால் அனுதாபம் கூடுதலாகவே கிடைக்கும்; அத்துடன் எடப்பாடிக்கு கவுண்ட்டர் கொடுத்தது போலவும் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

    காத்திருக்கும் தொண்டர்கள்

    காத்திருக்கும் தொண்டர்கள்

    ஆனால், தற்போதைய நிலையில் வெளியே வர சசிகலா விரும்பவில்லையாம். அதே நேரத்தில் அறிக்கை கொடுத்தால் போதும் என சொல்லி அழைப்பை புறக்கணித்திருக்கிறார் சசிகலா. இருந்தாலும், சசிகலா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க வரவேண்டும்; இப்போது துள்ளிக் கொண்டிருக்கும் அதிமுக இரட்டைத் தலைமை என்ன செய்கிறது என பார்க்கத்தான் போகிறோம் என்று இலவு காத்து கிடக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+