ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா மோசடிக்கும் என்ன சம்பந்தம்? சிக்கும் பாஜகவினர்? சசிகாந்த் செந்தில்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் பாஜகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இந்த கொலையில் பாஜக கதற வேண்டியதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டிரைப்ஸ் இணையதளத்திற்கு திருவள்ளூர் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கிரிமினல் என விமர்சிக்கும் போதே ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் அவருக்கு ஏதோ பிரச்சினையிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

எங்கள் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மிகவும் தெளிவான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது ஆரூத்ரா மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு பாஜக கதற வேண்டியதற்கான காரணம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்பது விசாரணையில் தெரியவரும்.
ஆருத்ரா மோசடியையே பாஜக மூட பார்க்கிறார்கள். ஆனால் இந்த மோசடியில் பாஜகவினருக்கும் தொடர்பிருக்கிறது என தெரிந்தே, அவர்களை வளர்த்துவிட்டிருக்கிறார்கள், அந்த மோசடியை மூடி மறைக்க பார்க்கிறார்கள். இது குறித்து செல்வப்பெருந்தகை கேட்டதால் ஏற்பட்ட எரிச்சலில்தான் அவரை கிரிமினல் என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
நாங்கள் அண்ணாமலைக்கு சொல்வது என்னவென்றால் நீங்கள் என்னதான் சுற்றி அடித்தாலும் நாங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் என்ன என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்க போகிறோம். நீங்கள் எங்களை மடைமாற்றி லெப்ட்ல் இன்டிகேட்டரை போல் ரைட்ல கையை காட்டி வண்டியை நேராக ஓட்டுவதை எல்லாம் நாங்கள் ரொம்ப நாளாக பார்த்திருக்கிறோம்.
ஆருத்ரா மோசடிக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு சம்பந்தமில்லை என அவர் பதில் சொல்லட்டும். அராஜகம் செய்து கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும், தமிழகத்தையும் ஒப்பிடவே முடியாது. பாஜகவில் ரவுடிகள்தான் உறுப்பினர்களாகவும் கட்சி பொறுப்பிலும் இருக்கிறார்கள்.
ரவுடிகள் பட்டியலை வெளியிடுவதை விட ரவுடிகள் அல்லாதோரின் பட்டியலை வெளியிட்டால் எளிதாக இருக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சமூகநீதி கிடைக்கவில்லை. ஜாதி எனும் கட்டமைப்பை முற்றிலும் உடைப்பதற்கான முயற்சிகளை பெரிய அளவில் எந்த மாநிலத்திலும் எடுக்கவில்லை. இவ்வாறு சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள்தான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்தார். இதற்கு அண்ணாமலை, செல்வப்பெருந்தகையை கிரிமினல் என்றும் அவர் மீது குண்டாஸ் வழக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக செல்வப்பெருந்தகை, பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
-
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications