சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசுப் பணி - வேதனையில் இருந்து மீள வேலை கொடுத்த அரசு
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடுத்துள்ளார். வேதனையில் இருந்து மீள அரசு வேலை கொடுத்த
சென்னை: சாத்தான்குளம் காவல்நிலையில் போலீஸ் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்த ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். வேதனையோடு இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீள அரசு வேலை தந்துள்ளது என்று பெர்சி கூறியுள்ளார். நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பெர்சி.
சாத்தான்குளத்தில் செல்போன் கடைவைத்திருந்த ஜெயராஜூம் பென்னிக்ஸ்க்கு லாக்டவுன் விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

தந்தை, மகன் மரணத்திற்கு நீதிகேட்டு தென்மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. உறவினர்களின் போராட்டம் இந்திய அளவில் தெரியவந்தது. காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள், ஏட்டு முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி வரை அனைவருமே ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மதுரை ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்தது.
எதிர்கட்சியினர் இந்த விசயத்தை கையில் எடுக்கவே, விசயத்தின் வீரியத்தை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். எங்களுக்கு வேலையோ பணமோ வேண்டாம், நீதி வேண்டும் என்று கூறினார் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி.
தந்தை மகன் மரண வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ் மகள் பெர்சிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார். தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார்.
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வேலை கொடுத்த அரசுக்கு நன்றி, இருவரை இழந்து வேதனையில் இருக்கும் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்துள்ளது. இருவரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications