சாத்தூரில் போட்டியிட சீட் மறுப்பு... அமமுகவில் இணைந்தார் ராஜவர்மன் - ராஜேந்திரபாலாஜிக்கு சாபம்
சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்துள்ளார். ராஜேந்திரபாலாஜிக்கு சட்டசபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தனர்.
சென்னை: சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தற்போது டிடிவி தினகரன் கட்சிக்கு தாவியுள்ளார். ராஜேந்திரபாலாஜிக்கு மக்கள் சட்டசபைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. நேற்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. 177 தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
அமைச்சர் ராஜேந்திராபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பகிரங்கமாக வெடித்தது. தன்னை கொன்று விடுவதாக ராஜேந்திரபாலாஜி மிரட்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார் ராஜவர்மன்.
இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன் இன்று டிடிவி தினகரன் கட்சியான அமமுகவில் இணைந்துள்ளார். சாத்தூர் தொகுதி எம்எல்ஏக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து காலியாக இருந்த தொகுதிக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. சாத்தூர் சட்டசபைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனவர் ராஜவர்மன். ராஜேந்திரபாலாஜியுடனான மோதலில் இந்தமுறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
டிடிவி தினகரன் கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், சட்டசபைத் தேர்தலில் ராஜேந்திரபாலாஜி தோல்வியை சந்திப்பார் என்று கூறினார். மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறிய ராஜவர்மன், சிவகாசியில் அனைத்து சமுதாய மக்களிடமும் ராஜேந்திரபாலாஜியின் பெயர் கெட்டுப்போயுள்ளது என்றார். யாருமே ராஜேந்திரபாலாஜிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று பயந்துதான் ராஜபாளையம் தொகுதிக்கு மாறி விட்டார் ராஜேந்திரபாலாஜி என்றும் கூறியுள்ளார் ராஜவர்மன்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications