Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினசரி 100 பேருக்கு சாப்பாடு.. 200 குடும்பங்களுக்கு காய்கறி.. கடவுள் சார் நீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவால் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவிகளைக் குவித்தவண்ணம் உள்ளனர் நல்லுள்ளம் படைத்தோர். அவர்களில் ஒரு அமைப்பு குறித்துத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்த தகவலை நமக்கு அனுப்பி வைத்திருப்பவர் ராஜேஷ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அனுப்பியுள்ள தகவல்:

Save Farmers Welfare Trust helps the poor

எனது பெயர் ராஜேஷ், Save Farmers Welfare Trust நிர்வாகி. ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு எங்களால் இயன்ற உதவியாக உணவு உணவுப்பொருட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செய்து வருகிறோம்.

Save Farmers Welfare Trust helps the poor

தினமும் 100 பேருக்கு சாப்பாடு, 200 குடும்பங்களுக்கு காய்கறி, 30 குடும்பங்களுக்கு அரிசி, 10 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

Save Farmers Welfare Trust helps the poor

எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பு மூலம் மேற்கண்ட உதவிகளை செய்து வருகிறோம்.

Save Farmers Welfare Trust helps the poor

களத்தில் நின்று பல்வேறு உதவிகளை செய்து வரும் மகராஜ புரம் ஊராட்சி துணைத்தலைவர் பழனிக்குமார் அவர்களுக்கும், பொருள் உதவி செய்து வரும் மணிமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜேஷ்

Save Farmers Welfare Trust helps the poor

நல்ல பணி.. தொடரட்டும்.

Save Farmers Welfare Trust helps the poor

சூப்பர் குடிமக்கள்:

சென்னையைச் சேர்ந்த நமது வாசகர் கே.வி. ரவிச்சந்திரன் அவர்கள் நமக்கு அனுப்பியுள்ள மடல் இது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாங்கள் சென்னை கிண்டி என்ஜீனியரிங் கல்லூரியில் 1976ம் ஆண்டு படித்து பட்டம் பெற்றவர்கள். ஒரு குழுவாக செயல்படும் சீனியர் சிட்டிசன்கள். எங்களது குரூப்புக்கு காஸ் என்று செல்லப் பெயர். அதாவது 76 கிளாஸ் என்பதன் சுருக்கம்தான் அது. தி.நகர் சிருங்கேரி மடத்தில் ஏழை எளிய மக்களுக்கு தினசரி சமையல் செய்து சாப்பாடு கொடுப்பதாக கேள்விப்பட்டோம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இங்கு தினசரி சாப்பாடு தருகிறார்கள்.

Save Farmers Welfare Trust helps the poor

இதையடுத்து எங்களது நண்பர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நாமும் ஏதாவது செய்யலாம் என்று பேசி ரூ. 50,000 வரை வசூலித்தோம். அந்தப் பணத்தை வங்கிக் கணக்கின் மூலமாக, சிருங்கேரி மடத்திற்கு நன்கொடையாக அளித்து அவர்களது அன்னதானத் திட்டத்திற்கு உதவி செய்தோம். இந்த லாக்டவுன் சமயத்தில் எங்களது சீனியர் சிட்டிசன் குழுவால் ஆன சின்னதொரு உதவி என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

இது சிறிய உதவி அல்ல சார்.. மிகப் பெரிய உதவி.. மிகப் பெரிய புண்ணிய காரியம்.. உங்களால் நிரம்பும் வயிறுகள் உங்களை நிச்சயம் வாழ்த்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+