மாஜி எம்எல்ஏ எம்.கே. பாலன் கொலை வழக்கு- அதிமுகவினர் உட்பட 16 பேர் சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினர் உட்பட 16 பேரும் ஒருவாரத்தில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் எம்.கே. பாலன். பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். திமுகவில் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபயிற்சிக்கு சென்ற எம்.கே. பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. மொத்தம் அதிமுக நிர்வாகிகள் உட்பட 16 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். பணத்துக்காக எம்.கே.பாலனை கடத்தி கொலை செய்து பின்னர் எரித்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் 2004-ம் ஆண்டு 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமும் அனைவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்மும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அனைவரையும் 3 வாரங்களுக்குள் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் சோமசுந்தரம் என்ற குற்றவாளி கால அவகாசம் கோரி மற்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை பெற்ற 16 பேரும் ஒருவாரத்தில் சரணடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications