மாதம் ரூ.1000 உதவித்தொகை + கணினி + தட்டச்சு பயிற்சி.. போட்டி தேர்வுக்கு இலவசமாக ரெடியாகலாம் - அரசு
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஓராண்டு காலத்துக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும்போட்டித்தேர்வு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோருக்கான சேர்க்கை என்பது நடைபெற உள்ளது.
மத்திய அரசும், மாநில அரசும் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இடஒதுக்கீடு, உதவித்தொகை, மானியம் உள்பட ஏராளமான திட்டங்கள் இதில் அடங்கும்.

அந்த வகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் வேலைவாய்ப்புக்கான பொது இயக்குனரகம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஓராண்டு கால உதவித்தொகையுடன் இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோருக்கான சேர்க்கை என்பது நடைபெற உள்ளது. அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது சென்னை கிண்டி ஆலந்தூர் ரோட்டில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட்டு வருகிறது. படித்த வேலையில்லாத எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு இம்மையம் மூலம் ஓராண்டு கால உதவித்தொகையுடன் கூடிய சிறப்பு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு ஆகியவற்றின் பயிற்சி என்பது ஜுலை 1 ம் தேதி முதல் தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சியில் சேர ஆர்வமுள்ள பிளஸ்2, தேர்ச்சி அல்லது பட்டய படிப்பை முடித்த மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த மையத்தில் வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சிக்கான வயது வரம்பு என்பது 18-27 ஆக நிர்யம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை மற்றும் இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தக்கம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கு ஜுன் 20ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடி இனத்தவர்களக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம், திருவிகா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, சென்னை என்ற அலுவலகத்தை அணுகலாம். இல்லாவிட்டால் 044 - 24615112 என்ற எண்ணை அலுவலக பணி நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ஜிகே ஸ்ரீராக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications