எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறாதது ஏன்?.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்படாது என தமிழக அரசு கூறியதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20ஆம் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கல்வித் துறை சார்பில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று தகவல்கள் வெளியாயின.

பள்ளிக் கல்வித் துறை
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையம்
எனவே அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம் என்றும் இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

தொடக்கக் கல்வி இயக்குநர்
இந்நிலையில், தொடக்க கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழலையர் வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையே நீடித்தது. எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் நியமனம்
2013-14க்கு பின், ஆசிரியர்களை புதிதாக நியமிக்காததால், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அங்கன்வாடி மையங்களில்
எனவே, அங்கன்வாடி மையங்களில் ஏற்கெனவே இருந்த குழந்தைகளுக்கு, முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications