ஸ்கூல் பக்கமே வராதீங்க.. ஆசிரியர்களை மிரட்டிய ஹெச்.எம். சிநேகலதா சஸ்பெண்ட்
பொள்ளாச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: "எதுக்கு எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க.. போராட்டத்துக்கு வரலேன்னா, வீட்டில இருக்க வேண்டியதுதானே" என்று பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு பெரும்பாலான அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், 3 நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மத்தியில் பேசுகிறார்.

எதுக்காக வந்தீங்க?
அதில், அவர் கேட்கும் முதல் கேள்வியே, எதுக்காக ஸ்கூலுக்கு எல்லாரும் வந்தீங்க? என்றுதான். தொடர்ந்து அவர் பேசும்போது, "போராட்டத்துக்கு வரவேண்டியதுதானே? அப்படி வரமுடியலைன்னா வீட்டுக்கு போக வேண்டியதுதானே? எதுக்காக ஸ்கூல் வந்தீங்க?

சம்பளப் பிடித்தம்
இன்னைக்கு உங்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்கும்னு நினைக்கலாம். ஆனால், நாளைக்கே உங்களுக்கு எல்லா பலன்களும் கேன்சல் பண்ணிடவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலைக்கு வரலைன்னா சம்பளம் மட்டும்தான் பிடிக்கப்படும்.

கண்டனம், ஆதரவு
நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால், யார் உங்களுக்கு உதவ போறாங்க?'' என்று பெண் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ பேச்சிற்கு கண்டனங்களும் ஆதரவும் மாறி மாறி எழுந்தன.

பள்ளிக்கல்வித்துறை
போராட்டத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்களை மிரட்டும் பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூடவே எழுந்தது. இந்த வீடியோ விவகாரம் பள்ளிக்கல்வித் துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

சஸ்பெண்ட்
பிறகு இது சம்பந்தமான நடத்தப்பட்ட விசாரணையில் பொள்ளாச்சி அருகே ரமணமுதலி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிநேகலதாதான் ஆசிரியர்களை மிரட்டியது என்பது தெரியவந்ததையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications