ஸ்கூல் பக்கமே வராதீங்க.. ஆசிரியர்களை மிரட்டிய ஹெச்.எம். சிநேகலதா சஸ்பெண்ட்
பொள்ளாச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: "எதுக்கு எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க.. போராட்டத்துக்கு வரலேன்னா, வீட்டில இருக்க வேண்டியதுதானே" என்று பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு பெரும்பாலான அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், 3 நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மத்தியில் பேசுகிறார்.

எதுக்காக வந்தீங்க?
அதில், அவர் கேட்கும் முதல் கேள்வியே, எதுக்காக ஸ்கூலுக்கு எல்லாரும் வந்தீங்க? என்றுதான். தொடர்ந்து அவர் பேசும்போது, "போராட்டத்துக்கு வரவேண்டியதுதானே? அப்படி வரமுடியலைன்னா வீட்டுக்கு போக வேண்டியதுதானே? எதுக்காக ஸ்கூல் வந்தீங்க?

சம்பளப் பிடித்தம்
இன்னைக்கு உங்களுக்கு சம்பளம் நிறைய கிடைக்கும்னு நினைக்கலாம். ஆனால், நாளைக்கே உங்களுக்கு எல்லா பலன்களும் கேன்சல் பண்ணிடவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலைக்கு வரலைன்னா சம்பளம் மட்டும்தான் பிடிக்கப்படும்.

கண்டனம், ஆதரவு
நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால், யார் உங்களுக்கு உதவ போறாங்க?'' என்று பெண் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ பேச்சிற்கு கண்டனங்களும் ஆதரவும் மாறி மாறி எழுந்தன.

பள்ளிக்கல்வித்துறை
போராட்டத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்களை மிரட்டும் பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூடவே எழுந்தது. இந்த வீடியோ விவகாரம் பள்ளிக்கல்வித் துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

சஸ்பெண்ட்
பிறகு இது சம்பந்தமான நடத்தப்பட்ட விசாரணையில் பொள்ளாச்சி அருகே ரமணமுதலி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சிநேகலதாதான் ஆசிரியர்களை மிரட்டியது என்பது தெரியவந்ததையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications