மதரசாவை இடிப்பது மட்டும் நோக்கமல்ல! 4,000 முஸ்லீம்களை வெளியேற்றும் நடவடிக்கை! எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜித் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் முகமது ஷஃபி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“சமீபகாலமாக, பாசிஸ்டுகளால் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தின் சொத்துக்களை, சட்டவிரோதமாக புல்டோசர் மூலம் இடிப்பது என்பது, நாட்டை ஆளும் பித்தலாட்ட சங்பரிவார பாசிஸ்டுகளால் சாதாரணமாக்கப்பட்டு விட்டது. மேலும் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன், அதிகாரவர்க்கத்தால் நடத்தப்படும் இந்தக் கொடுமையால், பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ''
''ஹல்த்வானியில், அதிகார வர்க்கம் சட்டவிரோதம் என குறிப்பிடும் மதரசா கட்டிடத்தை அகற்றுவது மட்டுமல்ல அவர்களது நோக்கம், மாறாக பல தசாப்தங்களாக அவர்கள் வாழ்ந்து வரும் நிலத்தில் இருந்து 4000க்கும் மேற்பட்ட குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையும் அடங்கியதாகும். இக்கொடுமையில் பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்கம் போல் முஸ்லிம்கள் தான். மக்கள் வெளியேற்றத்திற்கு அதிகார வர்க்கம் தெரிவிக்கும் கதைகள் உண்மைத்தன்மை இல்லாத முரண்பாடுகள் நிறைந்ததாகும்.''
''2007-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ரயில்வே கூறியது என்னவென்றால், அவர்களின் 29 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 29 ஏக்கரில் 10 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 78 ஏக்கர் நிலத்தில் தூண்களைக் குறியிட்டு நிறுவியதாக 2016 ஆம் ஆண்டு அவர்களின் பதிப்பு இருந்தது. அதேவேளையில், அந்த நிலம் மாநில அரசு மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் மாநில அரசு அளித்த பிரமாணப்பத்திரத்தில் கூறியிருந்ததால், ரயில்வேக்கு கேள்விக்குரிய நிலத்தின் மீது உரிமை இல்லை.''
''பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், வீடுகள், வணிகத் தளங்கள் மற்றும் மசூதிகள் மற்றும் கோவில்கள் போன்ற மத இடங்கள் உட்பட - முழுப் பகுதியும் நிரந்தரக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது. அதிகாரிகளின் சட்டவிரோத செயலால் ஏற்கனவே 5 பெறுமதியான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு அப்பகுதியில் அமைதியின்மை நிலவுகிறது.''
''ஆகவே, அரசாங்கம் மற்றும் அதன் எந்திரத்தால் நாட்டின் குடிமக்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறிவைக்கும் செயல்களை நிறுத்தவும், இதுபோன்ற இன மற்றும் பழிவாங்கும் செயல்களால் நாட்டை அராஜகத்திலிருந்து தடுக்கவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கோருகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications