விருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம்
சென்னை: விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அரசின் ஆதரவோடு டெல்லியில் போராடும் மக்கள் மீது தாக்குதல், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என்ற செய்திகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதன் நீட்சியாகத் தமிழகத்திலும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்பது பெருங்கவலையையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.
சனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறை என்பது சாதாரண மனிதர்களின் பேச்சுச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும் கட்டிக்காக்கும் வலிமைமிக்கப் படைப்பிரிவாகச் செயல்படுபவை. பத்திரிக்கை அலுவலகங்களின் மீதும், அலுவலர்கள் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல் என்பது சனநாயத்தின் குரல்வளையை நெரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கச் செயலாகும்.
தொடரும் இதுமாதிரியான தாக்குதல்கள் கருத்துரிமைக்கு விடப்படும் சவால்கள். குமுதம் ரிப்போட்டர் இதழில் ஆளும் கட்சி அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாகச் செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் மீது இப்படி ஒரு கோரத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அச்செய்தியில் சம்பந்தப்பட்டவர்கள்தான் எனச் செய்தி வந்த சிறிது நாட்களுக்குள் இத்தாக்குதல் நடந்திருப்பதன் மூலம் அறியமுடிகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனையைப் பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக்கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து சிவகாசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் கார்த்தி விரைவில் மீண்டுவர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரவிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications