மண்ணின் மைந்தர்களை அகதிகளாக விரட்டியடிப்பதுதான் திராவிட மாடலா?...சீமான் கொதிப்பு
சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையை விட்டு விரட்டுவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் மைந்தர்களை இருக்க இடமற்ற அகதிகளாக நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதுதான் விடியல் ஆட்சியா? திராவிட மாடலா? வெட்கக்கேடு என்று சீமான் கூறியுள்ளார். சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் ஆதித்தொல்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, கண்ணையா எனும் முதியவர் தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன்.

சமூக நீதி ஆட்சியென வெட்கமின்றி சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, தனிப்பெரு முதலாளிகளின் தேவைகளுக்காக, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, அவர்களை சென்னையைவிட்டே அப்புறப்படுத்தும் திமுக அரசின் கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை எனும் பெருநகரத்தின் உட்கட்டுமானத்திற்கும், மேம்பாட்டுக்கும் வியர்வை சிந்தி உழைத்த மண்ணின் பூர்வக்குடிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி, மாநகரைவிட்டே வெளியேற்றி கண்ணகி நகருக்கும், செம்மஞ்சேரிக்கும், கல்லுக்குட்டைக்கும், பெரும்பாக்கத்துக்கும் துரத்தியடிக்கும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களும், தங்கும் விடுதிகளும், கல்விக்கூடங்களும், வணிகத்தலங்களும் ஏன் உறுத்தலாகத் தெரிவதில்லை?
ஆக்கிரமிப்பென்றாலே, குடிசைகள்தானென முடிவுசெய்து, அவர்களது வாழ்விடங்களை இடித்துத்தரைமட்டமாக்கி, வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றுவதுதான் சமூக நீதியா? காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் மைந்தர்களை இருக்க இடமற்ற அகதிகளாக நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதுதான் விடியல் ஆட்சியா? திராவிட மாடலா? வெட்கக்கேடு!
ஆகவே, சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தீக்குளித்த முதியவர் கண்ணையாவுக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications