வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ன வச்சிருக்கார் பாருங்க.. ஆர்எஸ்எஸ் ஐ விட சீமான் ஆபத்தானவர்.. ராஜீவ் காந்தி
சென்னை: அன்று பெரியார் விதைத்த தமிழர் விதையை சமஸ்கிருத திணிப்பை விட, இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு பெரிது என்றால் சீமான் ஆர்.எஸ்.எஸ்சை விட ஆபத்தானவர். அவர் நேற்று வாட்ஸ் அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் என்று தெரியுமா என ஆவேசமாக சீமானின் ஸ்டேட்டஸ் படத்தை காண்பித்து ராஜீவ் காந்தி பேசினார்.
பெரியாரை ஆதரித்து பேசி வந்த சீமான், சமீப நாட்களாக பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். பெரியாரை விமர்சித்து பேசுவதால், திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் இன்று திமுகவின் மாணவர் அணி தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாடுக்களை வைத்தார்.

ராஜீவ் காந்தி கூறியதாவது:- சீமான் தனது வாட்ஸ் அப்பில் நேற்று இரவு என்ன பதிவு போட்டு இருக்கிறார் என்று பாருங்கள். சமஸ்கிருத திணிப்பை விட, இந்தி திணிப்பை விட, பெரியாரிய திணிப்பு ஆபத்தானது என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். யோசித்து பாருங்க.. தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும், பட்டம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, சமஸ்கிருதத்தில் இருந்தது தான் தமிழ் உருவாகியது என்ற கோட்பாடு சொல்லும் போது, தமிழ் தனித்த மொழி என்று அரசியல் களத்தில், பண்பாட்டு களத்தில் வென்று நாட்டியவர் தந்தை பெரியார்.
அன்று பெரியார் விதைத்த தமிழர் விதையை சமஸ்கிருத திணிப்பை விட, இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு பெரிது என்றால் சீமான் பேசுகிறார் என்றால், அவர் ஆர்.எஸ்.எஸ்சை விட ஆபத்தானவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியாக மட்டும் இல்லை.. இந்திய அரசியலில் தமிழ்நாடு, தமிழர் உரிமை, ஈழ அரசியலில் தேசிய இன உரிமை என அத்தனையும் காட்டிக்கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.
அவரிடம் இருந்து எண்ணிலடங்காதவர்கள் வெளியில் வந்து இருக்கிறார்கள். எங்களை போன்ற இளைஞர்களின் அறிவு, அரசியல், பொருளாதாரத்தை சுரண்டியிருக்கிறார். இன்றைக்கும் பல லட்சம் இளைஞர்கள் அவர் சொல்வதுதான் சரி என நம்புகிறார்கள். எத்தனை கதைகள், இட்லிக்குள் ஆமைக்கறி கொடுத்தார். மான் சுடுவதற்கு தடை இருந்த போது, மானை சுட சொல்ல பிரபாகரன் உத்தரவிட்டார் என சொல்லுவது அந்த அமைப்பை கொச்சைப்படுத்துவது.
போராட்ட களத்திற்கு போன போது உல்லாச பயணமாக இருந்தேன் என்று பேசுவது தமிழீழ விடுதலை ஆதரவு நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியிருக்கிறார். சொல்லப்போனால், ஒரு மாவீரனை ஸ்டார் ஹோட்டல் செஃப் போல காட்டி இளைஞர்களிடம் இருந்த போராட்ட எழுச்சியை தமிழ் தமிழர் உணர்வை மட்டுப்படுத்தி, தன் வயிறும் தன் குடும்பமும் வளர்வதற்கு மட்டும் சீமான் இருக்கிறார். இது ஆபத்தான மன நோய் மட்டும் இல்லை. அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான்" இவ்வாறு ராஜீவ் காந்தி விமர்சித்து பேசினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications