முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு.. முக முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய பின் உருக்கமான பேட்டி
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், மு.க முத்துவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறினார். மேலும், கொள்கை நிலைப்பாடு, அரசியல் பயணம் என்பது வேறு வேறாக இருந்தாலும், பாசம் என்பது ஒன்று தானே என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இவருக்கு சிவகாம சுந்தரி என்ற மனைவியும், அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர்.

மு.க. முத்துவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மு.க முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல, மு.க அழகிரி, மு.க தமிழரசு உள்பட மு.க முத்துவின் நெருங்கிய உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரைப்பலங்கள் என பல முக்கிய பிரமுர்கள் மு.க முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மு.க முத்து மறைவுக்கு ஸ்டாலினை சந்தித்து சீமான் ஆறுதல் கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-

மு.க முத்து மறைவுக்கு ஸ்டாலினை சந்தித்து இரங்கல் தெரிவித்தேன். எப்படி இருந்தாலும் இது ஒரு பெருந்துயரம்.. இந்த துயரத்தினை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். மு.க முத்து மறைவு அறிந்து இரங்கல் அறிக்கை வெளியிட்டேன். பிறகு நான் துயரத்தை பகிர்வதற்காக வந்தபோது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதனால் இன்று வந்து சந்தித்தேன். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இரங்கல் தெரிவித்தேன்.
அரசியல் கொள்கை, நிலைப்பாடுகளை தாண்டி உறவு என்று ஒன்று இருக்கிறது. அழகிரியை அண்ணா என்று தான் அழைப்பேன்.. அவர் என்னை போடா வாடா என்று தான் அழைப்பார். தயாளு அம்மாவை நான் அம்மான்னு தான் கூப்பிடுவேன்.. கொள்கை நிலைப்பாடு, அரசியல் பயணம் என்பது வேறு வேறாக இருந்தாலும், பாசம் என்பது ஒன்று தானே. அந்த அடிப்படையில் தான் நான் நீண்ட நேரம் வெயிலில் பசியோடு நின்றபோது மயங்கி விழுந்துவிட்டேன்.
அப்போது என்னை உடனே சந்தித்து என் உடல் நலனை பாத்துக்கோங்க என்று சொன்னவர் ஸ்டாலின். என் தந்தை இறந்தபோதும் என்னை சந்தித்து ஆறுதலாக இருங்க என்று சொன்னார் ஸ்டாலின். இது எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications