கியரை மாற்றிய சசிகலா.. சீமான், சரத்குமார், பாரதிராஜா.. வரிசையாக வீட்டுக்கே போய் சந்தித்த பிரபலங்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளான இன்று சசிகலா தனது அதிரடியை ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரது இல்லத்தில் வரிசையாக அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோர் இன்று சசிகலா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

வரிசையான சந்திப்பு
சில நிமிடங்கள் இவர்கள் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தினர். இதேபோல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சசிகலாவை சந்தித்தார். விவசாயிகள் சங்க தலைவரான பி.ஆர்.பாண்டியனும் சசிகலாவை சந்தித்து பேசினார். இவை அனைத்துமே நலம் விசாரிப்புகள் என்று கூறப்பட்டாலும், ஜெயலலிதா பிறந்த நாளில் சொல்லலி வைத்து மாதிரி நடந்துள்ளது.

பாரதிராஜா பேட்டி
பாரதிராஜா பின்னர் கூறுகையில்,ஒரு தமிழச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனவே வந்து பார்த்தேன். அரசியலில் இருந்த வெற்றிடம் அனைத்தையும் நிரப்ப தான் சசிகலா வந்துவிட்டார், என்று தெரிவித்தார்.

சரத்குமார், ராதிகா
சரத்குமார் கூறுகையில், நன்றி மறப்பது நன்றன்று என்ற அடிப்படையில் சசிகலாவை சந்தித்தேன். சசிகலா உடல்நிலை குறித்து விசாரித்தேன் என்றும் தெரிவித்தார். ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தோம் என்று தெரிவித்தார்.

சீமான் சந்திப்பு
அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சசிகலாவின் கணவர் நடராஜனுடன் சீமானுக்கு முந்தைய காலத்தில் நல்ல நட்புறவு உண்டு. தமிழ் தேசியம் போன்ற கொள்கைகளை முன்னிறுத்தியவர் நடராஜன். திமுக எதிர்ப்பு தமிழகத்தில் பரவலாக நடராஜன் முக்கிய காரணமாக இருந்தவர். இதனிடையே, இந்த சந்திப்புகள் அனைத்தும் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுததியுள்ளன.
சசிகலா தலைமையிலான அமமுக 3வது அணியை ஏற்படுத்தி, அதில், நாம் தமிழர், சரத்குமாரின் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து களமிறங்க திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகங்களை இந்த சந்திப்புகள் ஏற்படுத்துகின்றன. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியில் அதிக சீட் கிடைக்காமல் அதிருப்தியடையும் கட்சிகளுக்கு அமமுக கூட்டணி ரத்தின கம்பளம் விரிக்கக் கூடும். எனவேதான் 10 வருடமாக அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார் சசிகலாவை சந்தித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் சசிகலாவை புகழ்ந்துரைத்திருந்தார்.

அரசியல் திட்டம்
"நாங்கள் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கப்படும்" என்று இன்னொரு பக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதையும், இந்த சந்திப்புகளையும் பொருத்திப் பார்த்தால் திட்டம் தெளிவாக தெரியும். சசிகலாவை அதிமுகவில் இணைக்காவிட்டால், அடுத்து 3வது அணிதான் என்பது உறுதியாக தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications