நாங்கள் அழுக்குல்ல.. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானு கமலை நம்பிய மக்கள்- சீறும் சீமான்
Recommended Video
சென்னை: வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என கமல்ஹாசனை மக்கள் நம்பி வாக்களித்துவிட்டனர் என சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சி களம் கண்டது. இதுபோல் மக்கள் நீதி மய்யமும் அமமுகவும் இறங்கியது. இதில் 20 இடங்களில் அமமுக 3-ஆவது இடத்தையும் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3-ஆவது இடத்தையும், 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை காட்டிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. நாம் தமிழர் கட்சி மொத்தம் 40 தொகுதிகளில் 20 பெண், 20 ஆண் வேட்பாளர்களை தேர்வு செய்தது. திராவிட கட்சிகள் கூட செய்யாத எத்தனையோ புதுமைகளை சீமான் செய்துள்ளார்.

வெற்றிக் கனி
எனினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இது குறித்து விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள். மாற்று அரசியலுக்கான விதையாகத்தான் இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கிறேன். அடுத்த தேர்தலில் இதைவிட உழைத்து வெற்றிக் கனியை பறிப்போம்.

வெள்ளை
தேர்தலில் கமல்ஹாசனின் பங்களிப்பு என எதுவும் இல்லை. அவர் 50 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் இருக்கிறார். மக்களிடம் அனுபவம் இருக்கிறது. மேலும் அவர் வெள்ளையாக இருக்கிறார்.

போட்டி
வெள்ளையாக இருப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அதனால் அவருக்கு ஓட்டு போட்டு சில தொகுதிகளில் 3-ஆவது இடம் கிடைத்துள்ளது. நாங்கள் உழைக்கும் மக்கள். எங்களை அழுக்கானவர்களாகவே பார்க்கிறார்கள். அடுத்த தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுமா என தெரியவில்லை, ஆனால் நான் போட்டியிடுவேன்.

117 பெண்கள்
இதேபோல் 234 தொகுதிகளிலும் 117 பெண்கள், 117 ஆண்கள் என பிரித்துக் கொடுத்து போட்டியிட வைப்பேன். அதற்கான வேலைகளில் இப்போதே இறங்குவேன். ரஜினி அரசியலுக்கு வரும் போது இதைவிட பெரிய சலசலப்புகள் இருக்கும் என்றார் சீமான்.
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications