விஜயலட்சுமி, வீரலட்சுமி எதுக்கு? "அந்த லட்சுமிகள்" 10, 10 பேரை அனுப்புங்க.. சமாளிக்கிறேன்: சீமான்
சென்னை: நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியை அனுப்புகிறவர்கள் 10,10 தனம் மற்றும் தைரிய லட்சுமிகளை அனுப்பட்டும் சமாளிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் கொடுத்துள்ளார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, திருமண மோசடி- 7 முறை கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தீவிரமான ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இதனால் விஜயலட்சுமி விவகாரத்தில் வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இருதரப்பும் மோதலில் இறங்கியது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சீமான் என்கிறவன் ஏதோ சோன் பப்டி விற்க வந்தவன் மாதிரியும், பானி பூரி விற்க வந்த பையன் மாதிரியும் என்ன வேணும்னாலும் பேசலாம்?
1 லட்சம் துப்பாக்கிகளை கடந்தவன்: நான் முதலில் யார்னு தெரியுமா? டேய்... 1 லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து போய் என் தலைவனை (பிரபாகரன்) பார்த்துட்டு வந்தவன். என் உயிரும் ஒன்னுதான்.... ஒன்னுதான்.. எதுக்கும் கவலைப்படமாட்டேன். என்னை பார்த்தா பயப்படுற ஆள் மாதிரி தெரியுதா? ஜெயிலில் போடுவ.. போடு.. அதுக்கு அப்புறம் வெளியில விடுவதானே? அதுக்கு அப்புறம் நான் உன்னை விட்றுவனா?
அந்த பொம்பளை யாரு?: சும்மா.. முதல்ல அந்த பொம்பளை யாரு? ஏன் இந்த விஜயலட்சுமி, வீரலட்சுமின்னு அனுப்பி கிட்டு இருக்க? எனக்கு பிறப்புல, ரத்தத்துல வீரம் இருக்கு. நான் ஏற்றுக் கொண்ட தலைவன், வீரமே உருவமாக இருந்தவன். அவரோட மகன் நான். எனக்கு வீரம் எல்லாம் இருக்கு. வேண்டாம்.. இரண்டு லட்சுமியும் திரும்ப போயிடுங்க..
"அந்த லட்சுமிகளை" அனுப்புங்க: என்கிட்ட இல்லாதது பணம்தான். எனக்கு தன லட்சுமியும் தைரிய லட்சுமியும் அனுப்பிவிடு.. 10 கூட அனுப்பு.. சமாளிக்கிறேன். 10 தனலட்சுமி, 10 தைரிய லட்சுமியை அனுப்பிடுங்க.. சும்மா ஏதாவது பூச்சாண்டி காட்டிகிட்டு..
அவதூறால அழிவேனா?: ஒருத்தர் கூட ஏய்.. யாரும்மா நீன்னு கேட்கலையே.. கர்நாடகாவில் உட்கர்ந்துகிட்டு எல்லாம் தெரியாம பேசிட்டேன்னு மன்னிப்பு கேட்குற.. எல்லாம் நீ ரசிக்கிற.. நானும் அதை ரசிக்கிறேன். நான் விழுந்துடனும், ஒழிஞ்சிடனும்னு நினைக்கிற.. ஏ.... அவதூறால் அழிஞ்சு போறவனா நானு? இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications