சாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கினார்.. ஜெ. சமாதியில் செல்லூர் ராஜூ கண்ணீர்
Recommended Video
சென்னை: சாதாரண மனிதனான என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா என அவரது சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் செல்லூர் ராஜூ.
பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்துவதற்குள் தேர்தல் வந்துவிட்டதால் அது தொடர்பாக விவாதம் நடத்த தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் கூட்டுறவு , உணவு மற்றும் நிகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. முன்னதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது மனைவி, மகளுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
பின்னர் மானிய கோரிக்கை விளக்கப் புத்தகத்தை வைத்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

கண்ணீர் மல்க
அப்போது அவர் கூறுகையில் சாதாரண மனிதனாக இருந்த என்னை அமைச்சராக்கினார் ஜெயலலிதா என கண்ணீர் மல்க செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.

வேதனை
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு முறையும் சட்டசபையில் நான் பேசும் போதும் ஜெயலலிதா என்னை பாராட்டுவார், உற்சாகப்படுத்துவார். அமைச்சர் பதவி இருந்தாலும் ஜெயலலிதா இல்லாதது வேதனையாக இருக்கிறது.

நீதி வெல்லும்
கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவதில் ஜெயலலிதாவின் தளபதிகளாக ஓபிஎஸ் , இபிஎஸ் ஆகிய இருவரும் செயல்படுகின்றனர். ஜெயலலிதா எனக்கு கொடுத்த பதவியை சிறப்பாக செய்து வருகிறேன். 11 எம்எல்ஏக்கள் வழக்கில் நீதி வெல்லும், தர்மம் வெல்லும் என்றார்.












Click it and Unblock the Notifications