சென்னை மக்களே.. டர்ரு புர்ருன்னு வண்டி ஓட்டுறாங்களா.. ஜஸ்ட் ஒரு கிளிக்.. வாட்ஸ்அப் பண்ணுங்க.. முடிஞ்
சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து வீடியோ, போட்டோ எடுத்து போக்குவரத்து காவல்துறை ட்விட்டர், பேஸ்புக்,வாட்ஸ் அப் 9003130103 போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக புகார் அளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சாலையில் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கும் பதிவு செய்வது வழக்கம். மேலும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிற காரணத்தினால் ஏ.என்.பி.ஆர் போன்ற சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தியும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை வைத்து உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டு, உண்மையாக விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் குமுறல்களை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும் என்ன பயன் என்று புலம்பிய படி செல்லக்கூடிய காட்சிகளை நாம் சாலையில் பார்த்துள்ளோம்.
தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறையின் புதிய நடவடிக்கையாக, போக்குவரத்தை ஒழுங்காக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளை தட்டிகேட்டால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமோ என அஞ்சாமல், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பார்த்தால் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறையின் Greater chennai traffic police என்ற ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, புகாரை விசாரித்து உடனடியாக அபராதமும் வழக்கும் பதிவு செய்கின்றனர். இந்த நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாக புகார் அளித்த நபருக்கு புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கம் மூலம் பதிலளிக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications