சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் பேச்சு- ஆ.ராசாவுக்கு எதிராக 5,000 புகார்கள்: எச்.ராஜா டார்கெட்!
காரைக்குடி: சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என மனுஸ்மிருதி சொல்வதை சுட்டிக்காட்டி பேசிய திமுக மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை புண்படுத்திவிட்டதாக தமிழகம் முழுவதும் 5,000 புகார்கள் போலீசில் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னை நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.

பாஜக, காங். வலதுசாரிகள்
இதற்கு எதிராக பாஜக, காங்கிரஸ் வலதுசாரிகள் கடுமையாக கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என்பது வலதுசாரிகளின் கோரிக்கை.

என்ன தவறு? பெரியாரிஸ்டுகள்
ஆனால் திராவிடர் இயக்கம் காலந்தோறும் மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி பேசி வரும் கருத்து இதுதான்; இன்றைக்கு ஏதோ ஆ.ராசா திடீரென பேசிவிட்டதாக சொல்வது மிரட்டல் வேலை; வலதுசாரிகள் கொந்தளிக்க வேண்டியது மனுஸ்மிருதிக்கு எதிராகத்தானே தவிர ஆ.ராசாவுக்கு எதிராக அல்ல என்பது பெரியாரிஸ்டுகளின் நிலைப்பாடு.

எச்.ராஜா கொந்தளிப்பு
இந்நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் எச்.ராசா கூறியதாவது: ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. உங்களுக்கு பாஜக, பிரதமர் மோடியை பிடிக்காமல் போனால் அவர்களைத்தான் விமர்சனம் செய்ய வேண்டும்; அதற்காக இந்துமதத்தை எதிர்ப்பது ஏன்?

5,000 புகார்கள் டார்கெட்
ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் ஆ.ராசாவின் கருத்துகளை தாம் ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். இந்து மத உணர்வுள்ள ஒவ்வொரு இந்துவும் ஆ.ராசாவுக்கு எதிராக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் புகார் கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 5,000 புகார்களாவது ஆ.ராசாவுக்கு எதிராக கொடுக்க வேண்டும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
-
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்











Click it and Unblock the Notifications