Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் செல்ல அரசின் சூப்பர் சான்ஸ்.. ஜூலையில் இதை மட்டும் பண்ணுங்க போதும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு முதியோர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்யும் திட்டம் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல்கட்ட அறுபடை தரிசன பயணம் தொடங்கவுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை முதல் வாரத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். முருகன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அறுபடை வீடுகள்தான். ஒவ்வொரு முருக பக்தருக்கும் அறுபடை வீடுகளுக்கு சென்று வர வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.

senior-citizens-can-apply-in-the-first-week-of-july-to-visit-murugan-arupadai-veedu-free-of-charge

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் முருகனின் அறுபடை வீடுகளுக்கு முதியோர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றிற்கு 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தரிசனத்திற்காக கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பக்தர்கள் ஐந்து கட்டமாக அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்தப் பயணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பயணப் பைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை முழுமையாகச் செய்கிறது.

ஓராண்டில் 5 கட்டமாக முதியோர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒவ்வொரு கட்டத்திலும் 200 பக்தர்கள் இந்த கட்டணமில்லா பயண தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு அறுபடை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் இந்த ஆன்மிகப் பயணத்திற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பயணத்திற்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான முதல்கட்ட அறுபடை தரிசன பயணம் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்திற்கான அறிவிப்புகள் இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளன. அறுபடை தரிசனத்திற்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் அந்த இணையதளத்திலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்டத்திலும் 400 பக்தர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 60 வயதை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும். அறுபடை தரிசனம் போல, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் தரிசன பயணமும் தொடங்கப்படவுள்ளது. இந்தப் பயணங்களுக்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+