முட்டாள்தனமான அறிவாளிகள்.. என்ன ரஜினி கருத்துக்கு செந்தில் குமார் எம்பி இப்படி பதில் சொல்லிட்டாரே!
தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று ரஜினியின் பேச்சுக்கு தர்மபுரி எம்பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று ரஜினியின் பேச்சுக்கு தர்மபுரி எம்பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்.
பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
அப்போ அவர் சொல்ல வருவது தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று.😉 pic.twitter.com/UbDXjdffdF
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) 14 ஜனவரி, 2020
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். திமுகவினர் பலர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். நாளைக்கு பொங்கல் வைப்பதற்காக பதிலாக ரஜினிக்கு எதிராக இன்றே திமுகவினர் பொங்கல் வைத்து வருகிறார்கள்.
ரஜினிக்கு முன்னே பெரிய பொறுப்பு உள்ளது.. அது அவருக்கும் தெரியும்.. சூசகமாக சொன்ன குருமூர்த்தி!
இந்த நிலையில், திமுக தர்மபுரி எம்பி செந்தில் குமார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், அப்போ அவர் சொல்ல வருவது தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.