6 வாரம்! செந்தில் பாலாஜி கைதால் அமலாக்கத்துறைக்கு சிக்கல்? மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு தான் திமுகவில் இணைந்து அமைச்சரானார்.

இந்நிலையில் தான் 2011-2014 காலக்கட்டத்தில் போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்ட புகாரில் செந்தில் பாலாஜி சிக்கினார். இந்த புகாரில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்பட மேலும் சிலர் மீது சிசிபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பிறகு வேலை வழங்காதவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட தகவலை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் கடந்த 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அமலாக்கத்துறையின் காவலில் தனியார் மருத்துவமனையில் உள்ள நிலையில் நாளை அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது அமலாக்கத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. கைது பற்றி முறையான தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான நோட்டீஸ் வழங்காமல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் துன்புறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பரிசீலனை செய்த மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்னும் 6 வாரங்களுக்குள் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications