அல்லாடும் செந்தில் பாலாஜி டீம்.. குற்றச்சாட்டு பதிவு இல்லை + புதிய மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதில்?
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எதுவும் இன்று பதிவு செய்யப்படவில்லை. அத்துடன், செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி, அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜுன் 14ம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறை: ஆனால், அன்றைய தினமே இதய பாதிப்பு ஏற்படவும், உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஒரு மாத வரை மருத்துவமனையில் இருந்த அவர், பிறகு, புழல் சிறையில் மாற்றப்பட்டார்.. இப்போதுவரை இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடிக்கிறார்.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டை நாடினார்.. இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருவதால், ஜாமீன் குறித்த மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்கும் என்று ஹைகோர்ட் சொல்லிவிட்டது. இதையடுத்து, அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
அல்லி உத்தரவு: கடந்த 11ம்தேதியும், காணொலி மூலம் செந்தில்பாலாஜி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது, அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அந்தவகையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, 22ம் தேதியன்று, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும், அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.அல்லி அதிரடியாக உத்தரரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று 22ம் தேதியுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதால், மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார் செந்தில் பாலாஜி..
மறுத்த கோர்ட்: முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. கடந்த 12ம் தேதி இது தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்..
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருந்தபோதும்கூட, ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றம் எதுவும் இல்லை என்பதால் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
எதிர்பார்ப்பு: அந்தவகையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 22ம் தேதி பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலையிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தபடி இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை. எனவே பிரதான பண மோசடி வழக்கில் முடிவுகாணும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பில் மனு தக்கல் செய்யப்பட்டது.. இந்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் தர சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications