செந்தில் பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440.. சிறை விதிகளும் பொருந்தும்.. புழல் சிறை அறிவிப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணை கைதிக்கான பதிவேடு எண் 001440 வழங்கப்பட்டுள்ளது எனபுழல் சிறைத் துறை தெரிவித்துள்ளது.
நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவரிடம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நேரடியாக மருத்துவமனைக்கே வந்து விசாரணை நடத்தினார். அப்போது செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி சார்பில் இரு மனுக்களும் அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நேற்று இரு தரப்பு வாதங்கள் நடந்தன. அதில் கைது வாரண்டு குறித்த மெமோ செந்தில் பாலாஜிக்கு அனுப்பியும் அவர் அதை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த மனுக்கள் மீது இன்றைய தினம் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய மனு ஆகிய இரு மனுக்களும் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் துணை ராணுவ படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர். செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டை புழல் சிறைத்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணை கைதிக்கான பதிவேடு எண் 001440 வழங்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேடு எண், அவர்களுக்கான விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள்.
-
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications