ஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல
சென்னை: ஒரு காலத்தில் கீறியும், பாம்புமாக சண்டை போட்டு கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், எம்.பி. ஜோதிமணியும் இப்போது நண்பர்களாக மாறியுள்ளனர்.
கரூர் மாவட்ட அரசியலை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்பாலாஜி தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாவட்டத்தில் அதிமுகவை வளர்க்க பேயை போல் சுற்றினார். மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து அதிமுகவை வளர்த்தார்.

அதிமுகவுக்கு எதிராக யார் அரசியல் செய்தாலும் அவர்களை உண்டு இல்லை எனச் செய்துவிடுவார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பாக ஜோதிமணியும் போட்டியிட்டனர். அப்போது, ஜோதிமணியை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்த செந்தில்பாலாஜி அவருக்கு பல வழிகளிலும் குடைச்சல் கொடுத்தார்.

இந்நிலையில் காலச்சக்கரம் இவ்வளவு வேகமாக சுழலும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமமுகவுக்கு சென்று இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ள செந்தில்பாலாஜி, இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்ற முறையில் ஜோதிமணிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு அவரை வெற்றிபெற வைத்தார். இவரும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிவிட்டார்.
இதையடுத்து கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே கலந்துகொள்கின்றனர். பழைய பகையை மறந்து நண்பர்களாக மாறிவிட்டனர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தனக்காக தேர்தல் பணியாற்றி வெற்றிபெற வைத்தவர் என்ற நன்றிக்கடனுக்காக ஜோதிமணி எம்.பி.யும் கலந்துகொள்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications