நள்ளிரவில் சோகம்! பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா சென்ற கார் விபத்து.. டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி
சென்னை: பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா, சாலை விபத்தில் உயிர் தப்பியுள்ளார். பெரம்பலூர் அருகே பஞ்சரான காருக்கு டயர் மாற்றும்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தேவிப்பிரியாவின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தேவிப்ரியா தனது சொந்த ஊரான தேனிக்கு சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் பெரம்பலூர் அருகே பாடலூரில் அவரது கார் பஞ்சர் ஆகியுள்ளது. பஞ்சரான காருக்கு டயர் மாற்றும்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தேவிப்ரியா உயிர்தப்பியுள்ளார்.

நடிகை தேவிப்பிரியாவின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியை சோ்ந்த நடிகையின் ஒட்டுநா் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தார். டிரைவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த தேவிபிரியாவின் உதவியாளா் தேனி மாவட்டத்தை சோ்ந்த திவாகர் படுகாயமடைந்தார்.
நடிகை தேவிபிரியா கொடுத்த தகவலின் போில், போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த திவாகர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒட்டுநா் முத்து கணேஷ் உடல் பிரதேப் பாிசோதனைக்காக பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரம்பலூா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நடிகை தேவிப்பிரியா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தனது முத்திரையைப் பதித்தவர். வாலி, காக்க காக்க, காதல் கொண்டேன், காதல், பெருசு, விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ல வருடங்களாகப் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் பல பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்து புகழ்பெற்றவர்.












Click it and Unblock the Notifications