தேவியின் கள்ள உறவு.. குடிபோதையில் உளறி கொட்டிய ரவி.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற நடிகை!
கள்ளக்காதலனை கொன்ற துணை நடிகை உட்பட 4 பேர் கைதாகினர்
சென்னை: உறவை துண்டித்துவிட்ட ஆத்திரத்தில் தகராறு செய்த ரவியை... துணை நடிகை தேவி உருட்டுக்கட்டையாலேயே அடித்து கொன்றுவிட்டார்.. இது சம்பந்தமாக தேவி உட்பட 4 பேரும் கைதாகி உள்ளனர்.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவிதான் தேவி.. சினிமாவில் துணை நடிகையாக உள்ளார்.. நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கும் ரவி என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.. ரவியும் துணை நடிகர்தானாம்.. இந்த விஷயம் சங்கருக்கு தெரியவந்ததும், தேவியை கண்டித்தார்.

ஆத்திரம்
அதனால், தேவி, ரவியுடன் பழகுவதை நிறுத்திகொண்டார்.. மேலும் கணவருடன் வேறு ஒரு வீட்டிற்கும் வாடகைக்கு சென்றுவிட்டார். இதனால் ரவி கடுப்பானார்... தேவி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தார்.

லட்சுமி
2 வருடங்களாக ரவியுடன் பேச்சுவார்த்தையும் இல்லை.. இந்த நிலையில் கொளத்தூரில் உள்ள தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு ரவி சென்றுள்ளார்.. குடிபோதையில் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.. முன்புபோல் தன்னிடம் தேவி பேசுவதில்லை, பழகுவதில்லை என்று கூறி சண்டை போட்டுள்ளார்.

கொலை
லட்சுமி வீட்டிற்கு ரவி சென்று தகராறு செய்தவதை கேள்விப்பட்ட தேவி, கணவன் சங்கருடன் அங்கு சென்றார். தேவி, சங்கர், லட்சுமி, லட்சுமியின் கணவர் சவாரியா 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக் கட்டையாலேயே சரமாரியாக அடித்தனர்.. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

விசாரணை
இதையடுத்து 4 பேரும் போலீஸ் ஸ்டேஷனில் ரவியை கொன்றுவிட்டோம் என்று கூறி சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுராத்திரி போய் லட்சுமியின் வீட்டை கதவை ரவி தட்டி தொந்தரவு செய்துள்ளதாக முதல்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications