பணமோசடி புகாரில் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது
சென்னை: மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி சென்னை திருமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு சினேகம் அறக்கட்டளை மூலம் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி அவர் மீது நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். ஜெயலட்சுமியோ இந்த அறக்கட்டளைதான் நீண்ட ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் ஒரே பெயரில் அறக்கட்டளைகளையோ நிறுவனங்களையோ இருவருக்கு எப்படி ஒதுக்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தான் பாஜகவில் வளர்ந்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருக்கும் சினேகன் தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்றார். இதனையடுத்து சினேகன் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து விசாரணையில் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, சினேகன், ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
மூன்று மணிநேர விசாரணைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என்ன பஞ்சாயத்து: பாடலாசிரியர் சினேகன், தனது சினேகம் அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு சொந்த பணத்தில் உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர் 2015ஆம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளை மூலம் உதவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் பெயரை போலியாக சமூகவலைதளங்களில் தொடங்கி பண வசூலில் ஈடுபட்டதாக நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் புகார் அளித்திருந்தார்.
ஜெயலட்சுமி மீதுள்ள கந்து வட்டி புகார்: சீரியல் நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைந்து கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாடி 90ஆவது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாடியை சேர்ந்த கீதா என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக ஜெயலட்சுமி கூறியதாகவும் சில நாட்கள் கழித்து எங்களது விண்ணப்பங்கள் ரத்தாகிவிட்டதால் தொழில் தொடங்குவதற்கான நிதியை தானே தருவதாகவும் கூறினார். நாங்கள் அவரிடம் வாங்கி பணத்திற்கு வட்டியும் அசலும் செலுத்திவிட்ட நிலையில் கந்து வட்டி கேட்டு எங்களை மிரட்டுகிறார் என கீதா புகாரில் கூறியிருந்தார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications