ராத்திரியில்தான் அத்தனை லீலைகளும்.. எம்எல்ஏவை அம்பலப்படுத்தும் நாம் தமிழர் வக்கீல் அருள்
பெரம்பலூர் எம்எல்ஏ மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: "ஸ்டார் ஹோட்டல்ல அறை எண் 116-ல் கட்சி பெயரிலேயே ரூம் எடுத்திருக்கிறார்கள்.. ராத்திரி நேரத்தில்தான் அந்த எம்எல்ஏவின் லீலைகளே ஆரம்பமாகுது.. இனியும் இந்த மண்ணில் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது" என்று வக்கீல் அருள் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தை போலவே பெரம்பலூர் மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான ஒரு அவலம் நடந்துள்ளது. அதிமுக எம்எல்ஏவே இந்த பாலியல் சமாச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை வெட்ட வெளிச்சமாக்கியவர் வக்கீல் அருள் என்பவர். இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் அருள்.
மேலும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அருள் பிரத்தியகே பேட்டி ஒன்றினை இது தொடர்பாக அளித்துள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:

பெரிய அதிர்ச்சி
தொடர்ச்சியாக இது சில ஆண்டுகளாகவே நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுல ஆளும் கட்சியை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதுதான் பெரிய அதிர்ச்சி. மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்களே பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது பெரிய மனவலியை ஏற்படுத்தி உள்ளது.

அச்சுறுத்தல்
வேலை கேட்டு வரும் பெண்களை, ஆசைகாட்டி, கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பாலியல் தொல்லைகளை தந்துள்ளார்கள். மேலும், ஆசைப்படும் பெண்களை இச்சைக்கு இணங்குமாறு சில ஆட்களை தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர்.

அறை எண் 116
கேட்கும் பெண்களை, கேட்கும் நபர்களுக்கு கொண்டு போய் விட்டு வரும் புரோக்கர் வேலையையும் சேர்த்து பார்த்துள்ளனர். ஸ்டார் ஹோட்டல்ல அறை எண் 116-ல் கட்சி பெயரிலேயே ரூம் எடுத்திருக்கிறார்கள். தினமும் பல பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஈடுபட்டு இருந்திருக்கிறார். ராத்திரி நேரத்தில்தான் அந்தஎம்எல்ஏவின் லீலைகளே ஆரம்பமாகிறது.

மிரட்டுகிறார்கள்
2 நாளைக்கு முன்னாடிகூட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தர வந்தார். அவர் 2 குழந்தைகளுக்கு தாயார். கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். புகார் கொடுக்க முயன்ற பெண்ணை மிரட்டுகிறார்கள், மேலும் இவரோடு போ, அவரோடு போ என்று உறவு வைத்து கொள்ள சொல்லி உள்ளார்கள்.

பேரம் பேசுகிறார்கள்
இதனால் அந்த பெண் நேரடியாக போலீசுக்கு போய்விட்டார். அங்கு எம்எல்ஏ மீது புகார் சொல்லவும், போலீஸோ பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து கொண்டு அதே எம்எல்ஏவிடம் அழைத்து சென்று சமாதானம் பேசுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஆனால் எதற்கும் மசியாத அந்த பெண் அழுது கொண்டே கிளம்பி சென்றுவிட்டார்.

கொடுமை நிகழ கூடாது
இதுபோல 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்கள் சிலர் என்கிட்ட வந்து முறையிட்டு நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்கள். இது சம்பந்தமான ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க போகிறோம். காவல்துறையும் விசாரணை நடத்த வேண்டும். இனியும் இந்த மண்ணில் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது" என்றார்.

உரிய ஆதாரங்கள்
இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, உரிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். அருள் தெரிவித்த அந்த ஸ்டார் ஹோட்டலில் விசாரணையும் ஆரம்பித்துள்ளனர். மேலும் ஹோட்டலின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications