Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஷாக்”.. பாலியல் புகாருக்கு ஆளான பிக்பாஸ் பெண் போட்டியாளர் மாயா! 5 ஆண்டுக்கு முன் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை மாயா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் தொடர்பான செய்திகள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ள நடிகை மாயா கிருஷ்ணனும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து இருக்கிறார். போட்டி தொடங்கி 2 நாட்களே கடந்து இருக்கும் நிலையில் மாயா மீதான பாலியல் புகார் தொடர்பான செய்திகள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

Sexual complaint against Bigg Boss contestant Maya in 2018

குறிப்பாக தனியார் ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வெளியான செய்தியை அதிகம் பகிரப்படுகிறது. அதில் அனன்யா ராமபிரசாத் என்பவர் மாயா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை அந்த செய்தியில் பதிவிட்டு உள்ளனர்.

அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "நாடக கலைஞரான மாயாவை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முதலில் நான் சந்தித்தேன். எனக்கு அப்போது 18 வயது. மாயாவுக்கு 25 வயது. அவர் எனக்கு பயிற்சியாளராக இருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் என்னை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் அவர் கொண்டு வந்துவிட்டார்.

பள்ளி பருவத்தில் இருந்து என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களை பிரித்துவிட்டார். நான் மற்றவர்களிடம் பேசக் கூடாது என எனக்கு உத்தரவிடுவார். எனது நண்பர்களிடம் என்னை பற்றி அவதூறுகளை சொன்னார். என்னை அவர்கள் வெறுக்கும் வகையில் செய்தார். ஒரு புள்ளியில் என்னை அவரது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். நான் மோசமான பாலியல் உறவுக்குள் சிக்கவைக்கப்பட்டேன்.." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அனன்யாவின் இந்த குற்றச்சாட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு அப்போதே அறிக்கை மூலமாக நடிகை மாயா கிருஷ்ணன் விளக்கம் அளித்து இருந்தார். அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது, "அந்த பேஸ்புக் கணக்கு சம்பவத்தின் உண்மைகளை திரித்து என்னை துஷ்பிரயோகி போல் காட்டி உள்ளது. இது உண்மை கிடையாது.

நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக உள்ளேன். அதிகாரிகளுக்கும் அவர்கள் உண்மையைக் கண்டறிய எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் மற்றும் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அமைப்புக்கு எதிராக ஏற்கனவே நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 17, 2018 நிலவரப்படி என்னை இழிவுபடுத்தும் அனன்யாவின் பதிவு, என் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+