Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமியார் நித்யானந்தா மீது சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் ஆண் சீடர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார்கள், கடத்தல் புகார்கள், நில அபகரிப்பு, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களால் வழக்குகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா தினமும் புது புது புகார்களில் சிக்கி வருகிறார். அவரை கர்நாடகா மற்றும் குஜராத் போலீசார் கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆனால் சாமியார் நித்யானந்தா கைது நடவடிக்கைக்கு பயந்து இந்தியாவை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வசித்து வருகிறார். இருந்த போதிலும் சாமியார் நித்யானந்தாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி நடந்து வருகிறது. முதற்கட்டமாக நித்யானந்தாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

விரும்பி சேர்ந்தேன்

விரும்பி சேர்ந்தேன்

இந்நிலையில் நித்யானந்தா மீது தஞ்சையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் 2009 ஆண்டு தான் தான் சேர்ந்ததாக கூறினார்.

350 இளைஞர்கள்

350 இளைஞர்கள்

தனக்கு திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் விஜயகுமார் கூறினார். தான் மட்டும் 350 இளைஞர்களை ஆசிரமத்தில் சேர்த்ததாகவும், யோகா,தியானப்பயிற்சி என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்டத்தை நாளடைவில் தான் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

நித்யானந்தா ஒரு செக்ஸ் வெறியர் என்று குற்றம்சாட்டிய விஜயகுமார், அந்த ஆசிரமத்தில் உள்ள பலர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் நித்யானந்தா தன்னை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாகவும் புகார் கூறினார். மேலும் மாடல் அழகிகளை மயக்கி தனக்கு அனுப்புமாறு நித்யானந்தா தன்னிடம் கேட்டதாகவும் விஜயகுமார் பேட்டியின்போது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்ததார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

நித்யானந்தாவின் செயல்பாடுகள் பிடிக்காததால் 2015ம்ஆண்டு ஆசிரமத்தை வந்துவிட்டதாகவும் தன்னிடம் இருந்த 40லட்சம் மதிப்புள்ள நகைகள் நித்யானந்தாவிடம் உள்ளதாகவம் கூறிய விஜயகுமார், அதை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

நித்யானந்தா மடம்

நித்யானந்தா மடம்

நான் ஓரினச்சேர்க்கையாளன் என்றும் ஆசிரம பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் பொய் புகார்கள் கூறி வருகிறார்கள் என்று கூறிய விஜய குமார். நடிகை ரஞ்சிதாவின கண் அசைவில் நித்யானந்தா உள்ளார் என்றும், ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டில் தான் ஆசிரமத்தின் மொத்த கட்டுப்பாடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

போலீஸ் உறுதி

போலீஸ் உறுதி

நித்யானந்தா தன்னுடன் பேசிய செக்ஸ் உரையாடல்கள் உள்பட பல்வேறு ஆதரங்க தன்னிடம் உள்ளதாக தெரிவித்த விஜயகுமார் தேவைப்பட்டால் இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பின்பேன் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தார்கள் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+