Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சில்மிஷம்".. சட்டென நடுரோட்டில்.. பெண்ணை கட்டிப்பிடித்த "காமுகன்".. அட இவரா? அதிர்ந்த மடிப்பாக்கம்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தனியாகச் சென்ற பெண் ஒருவரைக் கட்டிப் பிடித்து ரகளையில் ஈடுபட்ட பேராசிரியர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடையாறு பகுதியில் அந்த பெண் வசித்து வருகிறார்.. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, மடிப்பாக்கம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்..

அப்போது சாலையில், இன்னொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் டூவீலர் மோதி இடித்துவிட்டார்.. இதனால், அந்த பெண், டூவீலருடன் கீழே விழுந்தார்..

சீண்டல்

சீண்டல்

உடனே இந்த இளைஞர் பதறிப்போய், அந்த பெண்ணை தூக்கிவிடுவதாக போல சென்று, டக்கென கட்டிப்பிடித்து கொண்டார்.. இதனால் அதிர்ந்து போன் அந்த பெண், அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.. உடனே அந்த இளைஞர் ஆத்திரம் அதிகமாகி, பெண்ணை கடுமையாக தாக்க தொடங்கினார்.. தலை, கால், உடம்பு என எல்லா இடங்களிலும் சரமாரியாக தாக்கினார்.. இதில் நிலைதடுமாறி மீண்டும் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார்.. உடனே இளைஞரும், அந்த பெண்ணின் மீது படுத்து, அவரை சீண்டிக்கொண்டே தாக்கினார்.

மடிப்பாக்கம்

மடிப்பாக்கம்

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகிவிட்டது.. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண், மடிப்பாக்கம் காவல் ஆணையரிடம் புகார் தந்தார்.. அந்த புகாரில், "மடிப்பாக்கம் ராம் நகரில் தனியாக டூவீலரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கட்டிப்பிடித்து

கட்டிப்பிடித்து

அப்போது, அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்ததும் இல்லாமல், பைக்கில் வந்த அந்த நபர் வேண்டுமென்றே, அவரை இடித்துத் தள்ளிவிட்டு அவருக்கு உதவி செய்வது போல அவரை கட்டியணைக்க முயன்றது தெரியவந்தது.. மேலும், அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவும், அவரை கடுமையாக தாக்கும் காட்சிகளும் சிசிடிவி காட்சியில் இடம் பெற்றிருந்தன.. இதைத்தொடர்ந்து அவர் சென்ற ரூட்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, அவர் யார் என கண்டறிந்தனர். இறுதியில் அவர் வேளச்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது.

 கட்டியணைத்த டீச்சர்

கட்டியணைத்த டீச்சர்

இவர் தனியார் காலேஜில் துணைப் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறாராம்.. இவருக்கு சரவணன் என்று இன்னொரு பெயர் உள்ளதாம்.. அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள்தான் இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. கைதானவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அந்தநேரத்தில் தண்ணி அடித்திருந்ததால், தெரியாமல் கட்டிப்பிடித்து விட்டதாகவும், போதையில் பெண்ணை தாக்கிவிட்டதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்.. பெண்ணை கட்டிப்பிடித்து, தகாத முறையில் நடந்து கொண்டது, கல்லூரி பேராசிரியரா என்று அதிர்ந்து போயுள்ளனர் இணையவாசிகள்.

 இரும்பு கேட்

இரும்பு கேட்

அதைவிட சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களும், இவரை அடையாளம் கண்டு, அதற்கு மேல் விக்கித்து போயுள்ளனராம். மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்துதான், அந்த பெண்ணின் பின்னாடியே வந்துள்ளதாக தெரிகிறது.. பெண்ணின் டூவீலரில் இடித்து கீழே தள்ளியபோது, மழையால் சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் அந்த பெண் விழுந்துள்ளார்.. கீழே விழுந்துவிட்டதால், அங்கு சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் சுத்தம்செய்யும்போது, பேராசிரியர் ஓடிவந்து பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.. பெண் எதிர்ப்பு தெரிவிக்கவும், அங்கிருந்த ஒரு வீட்டின் இரும்பு கேட்டில், அந்த பெண்ணின் தலையை பிடித்து பலமாக பலமுறை இடித்து தாக்குகிறார்.. இந்த காட்சிதான் காண்போரை பதற வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+