சங்கர் கொலை... கவுசல்யா தந்தை விடுதலை... தமிழக அரசு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
கடந்த 2016ல் நடந்த சங்கர் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது உடுமலை சங்கர் கவுரவ கொலை. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவர் சங்கரை காதலித்து வந்தார். சங்கர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சங்கரை 2015ஆம் ஆண்டு கவுசல்யா திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு தொடர்ந்து கவுசல்யாவின் பெற்றோர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கவுசல்யா மற்றும் அவரது கணவர் சங்கர் இருவரையும் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கவுசல்யாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்தார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரை விடுவித்தார். ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுசல்யாவின் பெற்றோர் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 5 பேருக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications