சபரிமலையில் கடுமையான கூட்டம்.. தமிழக பக்தர் மயங்கி விழுந்து பலி!
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற தமிழக பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளம். வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 50,000 க்கும் அதிகமான பக்தர்கள் சாமி ஐயப்பனை தரிசிக்க காத்திருந்தனர். நவம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆன்லைன் புக்கிங் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும் ஸ்பாட் புக்கிங்கில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சில பக்தர்கள், குழந்தைகள் என பலரும் மூச்சு திணறலால் அவதிப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் நிம்மதியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்யவும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தேவசம்போர்டு உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20,000ல் இருந்து 5000 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications