நிர்வாண போட்டோவை.. 13 வயசு பையனுக்கு அனுப்பி.. 2020ன் டீச்சர்கள் அட்டகாசம்.. வெலவெல பிளாஷ்பேக்!
2020-ல் பள்ளி சிறுவர்களை பலாத்காரம் செய்த டீச்சர்கள் கைதாகி உள்ளனர்
சென்னை: பெண் குழந்தைகள் பலாத்காரம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் நம் நாட்டில் நிலைலமை உள்ளதென்றால், ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமைதான் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.. அந்த வகையில், இந்த வருடம் நிலைகுலைய வைத்த சம்பவம் நடந்துள்ளதை மறக்க முடியாது... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் 2 சிறுவர்கள்.. இவர்களை நாசம் செய்தவர்கள் பெண்கள்.. அதுவும் டீச்சர்கள்!
இந்தியாவை சேர்ந்தவர் ரூமா பைரபகா.. 24 வயது இளம்பெண்.. ஜார்ஜியாவின் எப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்.. சயின்ஸ் பாடம் நடத்துகிறார்.. சோஷியல் சயின்ஸ் பாடப்பிரிவையும் மாணவர்களுக்கு நடத்துகிறார்.
இவர்தான் 13 வயது சிறுவனுக்கு ஆபாச போட்டோக்களை அனுப்பி வைத்து, தவறாகவும் நடந்து கொண்டதாக கூறப்பட்டது.. அதே பகுதியை சேர்ந்தவன்தான் இந்த சிறுவன்.

போட்டோ
ஆரம்பத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை சிறுவனுக்கு அனுப்பும் அளவுக்கு வந்துவிட்டது. விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். அதனால் கடந்த ஜனவரி 16ம் தேதி டீச்சர் கைது செய்யப்பட்டார்.

விவகாரம்
இவருக்கு அமெரிக்க குடியுரிமையும் இல்லை. ஒருவேளை போலீஸ் காவலில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டால், குடியேற்றக் காவலில் ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார் என்றெல்லாம் இந்த விவகாரத்தில் வழக்கு நடந்து கொண்டே இருந்தது.. 18 வயதிற்கும் கீழுள்ள யாரையுமே இனி டீச்சர் சந்திக்ககூடாது, அவரது பாஸ்போர்ட்டையும் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டு, அந்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் மிகப்பெரிய பரபரப்பை இந்த வழக்கு ஏற்படுத்தியது.

உறவு
அதேபோல, அமெரிக்காவில், டியூஷன் படிக்க வந்த 15 வயசுப் பையனை மயக்கி அவனுடன் 8, 9 முறை உறவு கொண்டதாக 34 வயசு டீச்சரை போலீஸார் கைது செய்தனர்.. இந்த விவகாரம் முதலில் போலீஸாருக்குப் போய், இறுதியில் அந்த டீச்சர் இப்போது ஜெயிலில் உள்ளார். அவர் பெயர் எல்லாரியா சில்வா. லூசியானா மாகாணத்தில் உள்ள ஜக்காரி என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் இந்த டீச்சர். இவர் தனது வீட்டில் டியூஷன் வேறு நடத்தி வருகிறார். இவரிடம் டியூஷனுக்கு 15 வயசு சிறுவன் ஒருவன் வருவான்.

உல்லாசம்
அந்தப் பையனை மடக்கி, மயக்கி செக்ஸ் உறவு வைத்துள்ளார் இந்த டீச்சர். அதுவும் 8, 9 முறை வைத்துள்ளாராம். என்ன கொடுமை என்றால் இந்தப் பையனுடன் சில்வா உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த டீச்சரின் மகனும் கூட அதே வீட்டில்தான் இருந்துள்ளான்முதலில் நிர்வாணப் படங்களைதான்.. சிறுவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்... அது போதாதென்று நிர்வாண வீடியோக்களை வேறு அனுப்பியுள்ளார். அதில் டீச்சரே நிர்வாணமாக தோன்றினாராம். ஆனால் முகத்தை மட்டும் மறைத்து அனுப்பியுள்ளார்.

பொறுப்பு
இதைப் பார்த்து அந்த சிறுவன் உணர்ச்சிவசப்பட்டுள்ளான். அதன் பின்னர் டீச்சர் மெல்ல மெல்லபேசி சிறுவனை கரைத்துள்ளார். கடைசியில் உடல் ரீதியான உறவுக்கு கொண்டு போய் விட்டாராம். உறவு வைத்துக் கொள்ளும்போதெல்லாம் டீச்சரே வந்து சிறுவனை தனது காரில் கூட்டிக் கொண்டு போவாராம். எல்லாம் முடிந்ததும் அவரே கொண்டு வந்து வீட்டில் விடுவாராம். என்ன பொறுப்பு பாருங்க! இப்படி 2020-ஐ தெறிக்க விட்ட இந்த டீச்சர்கள், மாணவர்களை மட்டுமல்ல, எல்லாரையுமே அதிர வைத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications