உழைப்பாளி உணவகம்... உழைப்பாளி மருத்துவமனை... ரஜினிகாந்த் கட்சியில் சித்தமருத்துவர் வீரபாபு..?
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபு இப்போது சொந்தமாக மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார்.
அந்த மருத்துவமனைக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் உழைப்பாளி. ரஜினிகாந்தின் ரசிகரான இவர் ஏற்கனவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் சிறிய கேண்டீன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் வீரபாபு இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்த மருத்துவம்
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது சொந்தமாக உழைப்பாளி என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கியுள்ள அவர் அங்கு வரும் நோயாளிகளிடம் ரூ.10 மட்டுமே சிகிச்சை கட்டணமாக வசூலிக்கிறார்.

ரஜினி ரசிகர்
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான வீரபாபு ஏற்கனவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் கேண்டீன் நடத்தி வருவதோடு அங்கு சாப்பிட வருபவர்களிடம் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறார். தனது உணவகம், மருத்துவமனை ஆகிய இரண்டிற்குமே ரஜினிகாந்த் திரைப்படமான 'உழைப்பாளி' என்பதையே பெயராக சூட்டியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான சிலரிடம் ரஜினிகாந்த் பற்றி அவ்வப்போது அவர் சிலாகித்து பேசுவதுண்டு.

தொலைபேசி மூலம்
இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், திடீரென ஒரு நாள் சித்தமருத்துவர் வீரபாபுவை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசிய ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருந்தார். இது வீரபாபுவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததோடு ரஜினி உடன் நிகழ்த்திய உரையாடல் அவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்திருக்கிறது.

ரஜினியுடன் இணைவார்
தற்போது உழைப்பாளி மருத்துவமனை மூலம் கொரோனா உள்ளிட்ட பல நோய்களுக்கும் சித்த மருத்துவம் அளித்து வரும் வீரபாபு, விரைவில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைந்து பணியாற்றும் எண்ணமும் மருத்துவர் வீரபாபுவிடம் உள்ளதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
-
விஜய் சொல்லி கொடுத்து தான் ரஜினி பற்றி ஆதவ் பேசினாரு..! “அந்த” கதையை மறைக்க நடந்த சதி! பிரபலம் ஆதங்கம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications