"ஒன்இந்தியாதமிழ்" நடத்தும்.. திருப்பாவை - திருவெம்பாவை பாடல் போட்டி! பங்கேற்க ரெடியா?
சென்னை: "மாதங்களில் நான் மார்கழி" என்று ஸ்ரீமத் பகவத் கீதையில், கண்ணன் திருவாய் மலர்ந்தருளினார். புனிதமான இந்த மாதத்தில், திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டு இறைவனை வழிபடுவது மரபு. மாதம் முழுக்க நீங்கள் பாடி மகிழ்ந்திருப்பீர்கள். உங்கள் பக்தி மார்க்கத்திற்கு உற்ற தோழனாக இருப்பது ஒன்இந்தியாதமிழின் வாடிக்கை. இந்த முறையும், திருப்பாவை, திருவெம்பாவை பக்தி பாடலை சிறப்பாக பாடும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் தர முன்வந்துள்ளது ஒன்இந்தியா தமிழ்.
உங்கள் குழந்தைகள் பாடும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை வீடியோவாக படம்பிடித்து, [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இ-மெயில் சப்ஜெக்ட்டில் Thiruppavai Thiruvempavai என்ற வரிகள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். சிறப்பாக பாடும் குழந்தைகளை தேர்வு செய்து ஊக்கப்படுத்த உள்ளது ஒன்இந்தியா தமிழ். வீடியோக்களை, அனுப்ப வேண்டிய கடைசி தேதி, ஜனவரி 20ம் தேதி, திங்கள்கிழமை.
வாருங்கள், கைகோருங்கள், உங்கள் குழந்தைகளின் திறனை உலகறிய செய்வோம்.













Click it and Unblock the Notifications