ஒல்லி நடிகரோடு கனெக்ஷன்..ஆர்த்தியோடு முடிச்சு போட்ட சுசித்ரா! குடும்ப கண்ணியம் போச்சு! பறந்த புகார்
சென்னை: பிரபல நடிகரான ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆர்த்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பாடகி சுசித்ரா பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்த்தியின் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் சர்ச்சைகளிலேயே சிக்காத நடிகர் என்றால் அது ஜெயம் ரவி. தான் சிறுவயதிலேயே திரைத்துறையில் அறிமுகமானாலும், ஜெயம் படம் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஜெயம் ரவி எனவே அழைக்கப்பட்டார்.
பின்னர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி அதிர வைத்தார் ஜெயம் ரவி. இதற்கு முன்னர் பல நட்சத்திர ஜோடிகள் பிரிந்திருந்தாலும், ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியின் பிரிவு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனுதாக்கல் செய்தார். பிறகு தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டதாகவும், இனி தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என அறிக்கையும் வெளியிட்டார். இந்த நிலையில் தன்னிடம் எதுவுமே தெரிவிக்காமல் தன்னை பிரிவதாக ஜெயம் ரவி கூறி இருப்பதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். கடுமையான கண்காணிப்பு, சந்தேகப்படுகிறார் என பல குற்றச்சாட்டுகளை ஆர்த்தி ரவி, மீது ரவி மோகன் வைத்தார்.
அதற்கு பிறகு இந்த விவகாரம் அமைதியாகச் சென்ற நிலையில் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி பழக்கத்தில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என ஜெயம் ரவியும் கூறியிருந்தார். அதேபோல் தான் கெனிஷாவும் கூறி இருந்தார். மீண்டும் இந்த விவகாரங்கள் ஓய்ந்து போயின. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசின் இல்ல திருமண விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பட்டு வேட்டி, பட்டு சேலையோடு ரவி மோகனும், கெனிஷாவும் கலந்து கொண்டனர். இதை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.
தன் வாழ்க்கையில் மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து கெனிஷா, ரவி மோகன், ஆர்த்தியின் தாயார் சுஜாதா என அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டனர். இதற்கிடையே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 40 லட்சம் ரூபாய் மாதம் தனக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி மனுதாக்கல் செய்ய, அதனை கிண்டல் செய்து ரவி மோகன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்த நிலையில் தங்களை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்ட செய்திகளை நீக்க வேண்டும் கூடுதல் அறிக்கைகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இருதரப்பும் அறிக்கை போரில் ஈடுபட வேண்டாம் என கூறிய நீதிமன்றம், இதற்கு முன் வெளியிட்ட பதிவுகளையும் நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒரு வழியாக இந்த விவகாரம் அமைதியாக சென்றது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் பரபரப்பை பற்ற வைத்தார் பிரபல பாடகியான சுசித்ரா. ஒல்லியான நடிகருடன் ஆர்த்தியை இணைத்து பேசியதோடு, அவர் மீது தான் தவறு எனவும் கூறி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் ஆர்த்தி தந்தை.
தன் மகள் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் அவதூறாக பேசிய கருத்துகளால் மனம் புண்பட்டு உள்ளது என்றும், இத்தனை ஆண்டுகள் தங்கள் கட்டிக் காத்த குடும்ப கண்ணியம், சுசித்ராவின் வீடியோவால் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தனது மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்ட சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications