Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தவர் உழைப்பில் குளிர்காய நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.. விளம்பரத்தால் பராசக்திக்கு வந்த புது சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்துக்கு போட்டியாகவே பராசக்தி திரைப்படம் வெளியிடப்படுவதாக ஒருபுறம் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிவாஜி கையில் இருந்து தீ பரவட்டும் என்று தீப்பந்தத்தை பெறுவது போன்று பராசக்தி திரைப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டு, அடுத்தவர் உழைப்பில், அடுத்தவர் பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக, இன்று சிவகார்த்திகேயனும், மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது என்றும் நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயனுக்கு எதிர்ப்பு

சிவகார்த்திகேயேன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் 10 ஆம் தேதிக்கு திரைக்கு வர உள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோதுவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட வெளியீட்டை முன்னிட்டு பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு புரமோஷன்களையும் செய்து வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே, பராசக்தி படத்தின் விளம்பரங்களில் சிவாஜி படத்தை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல

நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952ல் புரட்டிப்போட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் அதே பெயரில் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.

ஆனால், ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பைப் புறந்தள்ளி மீண்டும் அதே பெயரிலேயே (பராசக்தி) திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரவிருக்கிறது. வேதனையிலிருக்கும் எங்களுக்கு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல, நேற்று ஒரு தொலைக்காட்சியில், தீ பரவட்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவதுபோல பராசக்தி திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

யார் அதிகாரம் கொடுத்தது?

நடிகர் திலகத்தின் வாரிசுகளாக பிரபு, மூன்றாம் தலைமுறையாக விக்ரம் பிரபு ஆகியோர் இன்றளவிலும் தமிழ்த் திரையுலகில் தடம்பதித்து சென்று கொண்டிருக்கையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் திலகத்தின் வாரிசு என்ற ரீதியில் விளம்பரப்படுத்திக்கொள்ள யார் அதிகாரம், அனுமதி கொடுத்தது?

நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டு, அடுத்தவர் உழைப்பில், அடுத்தவர் பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக, இன்று சிவகார்த்திகேயனும், மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது.

சிவாஜியின் ஆன்மா மன்னிக்காது

ஒரு யுகக் கலைஞனாக கலை உலகின் தவப்புதல்வனாக கலைஞர் கருணாநிதி அவர்களின் புரட்சிகர வசனங்களை தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டுசேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தமிழ்த் திரையுலகம் கலையின் கொடையாக உலகிற்குத் தந்த திரைப்படம் தான் "பராசக்தி".

அந்தப் பெயரை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர்திலகத்தின் பெயரையும், புகைப்படத்தையும் தங்களுடைய வணிக நோக்கத்திற்காக, சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாவது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. விஜய்யின் கையில் இருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டு இப்போது அவருக்கு எதிராகவே செயல்படுவதாக கூறி சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+