"பாலியல் அக்கிரமம்".. சிவசங்கர் பாபாவுக்கு உடம்பு சரியில்லையாம்.. . சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
சிவசங்கர் பாபா இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு திடீரென உடம்பு சரியில்லையாம்.. அதனால், டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிவசங்கர் பாபா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகளும், முன்னாள் மாணவிகளும், தங்கள் பள்ளி ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை புகார்களாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையும் நடத்திவருகின்றனர்.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

ஆன்மீகவாதி
"ஆன்மீகவாதி' என்ற போர்வையில் தாங்கள் எந்த அளவுக்கு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பது குறித்து, அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சோஷியல் மீடியாவில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

ஆணையம்
எனவே, இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதுகுறித்து விசாரிக்க முன்வந்துள்ளது.. அதற்காக சிவசங்கர் பாபாவுக்கு சம்மனும் அனுப்பியிருந்தது... அதேபோல, பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், சிவசங்கர் பாபாவின் வழக்கறிஞர், ழுள்ளியின் பள்ளியின் தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே சம்மன் அனுப்பியது. அதன்படி, பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.

ஆஜர்
சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை... ஆனால், அவருக்கு பதிலாக, அவர் தரப்பு வக்கீல் நாகராஜன் மட்டுமே ஆஜராகி உள்ளார்.. சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான ஜானகி என்பவர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.. அதற்கான மெடிக்கல் சர்ட்டிகேட், போட்டோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்...

பரபரப்பு
இதையடுத்து, இந்த பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி நேரடியாக மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்... ஆஜரானவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது... சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலயில், சிவசங்கர் பாபா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications