பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1 ஆம் தேதி வரை சிறை!
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா இன்று காலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜூலை 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Recommended Video
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் செய்து இருந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இருப்பதாக அறிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்றனர். அங்கு இல்லாததால் டெல்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே உள்ள ஒரு ஓட்டலில் டெல்லி போலீசார் உதவியுடன் சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர்.
பின்னர் சிவசங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 நாள் ட்ரான்ஸ்ட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். டெல்லியில் இருந்து நேற்று இரவு 11.50 மணிக்கு சென்னை வந்தார்.

பின்னர் போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
அங்கு சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இன்று காலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ஜூலை 1 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications