எகிறி ஓடிய 5 டீச்சர்கள்.. "அவர் ரொம்ப நல்லவருங்க".. காமுகனுக்கு சர்ட்டிபிகேட் தந்தவர்கள் திடீர் மாயம
சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் மாயமாகி உள்ளனர்
சென்னை: சிவசங்கர் பாபா விவகாரத்தில் உடந்தையாக இருந்த 5 டீச்சர்களும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.. இதையடுத்து இவர்களை தேடும் பணி தொடர்கிறது.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர்.. இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிறகு இந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்தது.. கைதாகி உள்ள பாபாவிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அதேசமயம், சிவசங்கர் பாபாவின் இந்த காரியங்களுக்கு எல்லாம், அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது..
விசாரணை

கேளம்பாக்கம்
அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கேளம்பாக்கம் பழனிகார்டன் பகுதியில் உள்ள 5 ஆசிரியைகளுக்கு நேரில் சம்மன் கொடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.. அதன்படி நேற்று அந்த 5 டீச்சர்களின் வீடுகளுக்கும் சென்றனர்.. ஆனால், 5 பேருமே அங்கு இல்லை.. சம்மனுடன் அதிகாரிகள் வருவது தெரிந்து முன்கூட்டியே தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

சம்மன்
அந்த டீச்சர்கள் வீட்டில் இல்லாததால், அவர்களின் வீட்டு வாசலில் சம்மனை போலீசார் ஒட்டிவிட்டு சென்றனர்.. மேலும் தப்பி ஓடிய டீச்சர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.. இந்த 5 பேருமே சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் பாபா பற்றி நல்லவிதமான கருத்துக்களை சொன்னார்கள்.. முக்கியமாக சிவசங்கர் பாபா ரொம்ப நல்லவர் என்று திடமாக சொல்லி இருந்தனர்.
Recommended Video

விசாரணை
சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை சொன்னதால், எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் தெரிவித்தீர்கள் என்பது பற்றி அந்த டீச்சர்களிடம் விசாரிப்பதற்காகவே போலீசார் சம்மனுடன் சென்றதாக தெரிகிறது.

தலைமறைவு
வருகிற திங்கட்கிழமை முதல் 5 டீச்சர்களையும் நேரில் அழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.... ஆனால் அதற்குள் 5 பேருமே எஸ்கேப் ஆகி உள்ளனர்.. அவர்களை தேடி பிடித்து விசாரித்தால்தான், சிவசங்கர் பாபா உண்மையிலேயே நல்லவரா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.. பார்ப்போம்..!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications