பெருநகரங்களில்தான் "பிக்" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் "புஸ்" ஆகிப் போச்சு!
சென்னை: பெருநகரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது சிறுநகரங்கள், குக்கிராமங்களில் கண்டுகொள்ளப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 3-ன் அறிமுக விழா விஜய் டிவியில் நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 4 மணிநேரம் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

பெருநகரங்கள், சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்கு போகப் போவது யார்? என பெரும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடும் சென்னை பெருநகரத்திலும் இது தொடர்பான விவாதங்கள் அனல்பறந்தன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியனாது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைத் தாண்டி பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உச்சகட்ட கிரிக்கெட் போட்டிகளின் போது சிறுநகரங்களில் கூட நள்ளிரவில் வெடிவெடித்து கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் போன்ற நகர்ப்புற இளைஞர்களிடம் கேட்டால், அதை பார்த்து நாம் என்ன செய்யப் போகிறோம்.. அதில் எல்லாம் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லையே என ஸ்டைலாக கை விரிக்கின்றனர்.

இதேபோல் இளம்பெண்களும் கூட, நேரம் கிடைக்கனுமே.. வெட்டியாக ஒரு மணிநேரம் 2 மணிநேரம் அதுக்கு ஒதுக்கினால் இருக்கிற பிழைப்பை யார் பார்ப்பது என அங்கலாய்க்கின்றனர். இப்படி உள்ளூரில் விலைபோகாது என்பதால்தான் என்னவோ வெளிநாடு வாழ் தமிழர்களை களமிறக்கி ரேட்டிங்கை எகிற செய்ய முடிவு செய்திருக்கிறார்களோ என்னவோ?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications