Tamil Nadu Weather: ரொம்ப குளிருதா.. உங்களுக்கு ஒரு குட்நியூஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கடும் பனியின் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுக்க கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நீடித்தது. வானில் மேகமூட்டம் இல்லாததால் பனி அதிகம் பொழிந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலைவேளையில் மூடு பனி நிலவும். அதேநேரம், பனியின் தாக்கம் என்பது படிப்படியாக குறையும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை, வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications