லெட்டர் பேட் கட்சியை எல்லாம் கூப்பிட்டாங்களே.. பாஜகவால் கலங்கிய ஓபிஎஸ்.. பரபரப்பு முடிவு? ட்விஸ்ட்
சென்னை: டெல்லி பாஜகவால் முற்றிலுமாக ஓரம்கட்டப்பட்டதால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அவர் இதனால் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும் தகவல்கள் வருகின்றன.
நேற்று முதல்நாள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு எதிராக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.

பாரதிய ஜனதா கட்சி
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு)
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு)
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (பசுபதி குமார் பராஸ் பிரிவு)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அப்னா தால் (சோனேலால்)
தேசிய மக்கள் கட்சி
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (Neiphiu Rio)
அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
மிசோ தேசிய முன்னணி
திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
நாகா மக்கள் முன்னணி
இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே)
அசோம் கண பரிஷத்
பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ் மாநில காங்கிரஸ்
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (ஓம் பிரகாஷ் ராஜ்பர்)
சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா)
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி
ஜனநாயக்க ஜனதா கட்சி
பிரஹர் ஜனசக்தி கட்சி
ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா
ஜன் சுராஜ்ய சக்தி கட்சி
குக்கி மக்கள் கூட்டணி (மணிப்பூர்)
ஐக்கிய ஜனநாயகக் கட்சி
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
நிஷாத் பார்ட்டி
அகில இந்திய என் ஆர் காங்கிரஸ்
இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா
ஜன சேனா கட்சி
ஹரியானா லோகித் கட்சி
பாரத தர்ம ஜன சேனா
கேரள காமராஜ் காங்கிரஸ்
புத்திய தமிழகம்
லோக் ஜனசக்தி கட்சி
கோர்கா தேசிய விடுதலை முன்னணி
ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டு இருந்தார். இந்த கூட்டத்தில் மொத்தமாக ஓ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு அழைப்பே செல்லவில்லை.
லெட்டர் பேட் கட்சிகள்,. எம்பிக்கள் இல்லாத கட்சிக்கு எல்லாம் அழைப்பு சென்றது. ஆனால் முன்னாள் முதல்வருக்கு.. பாஜக சொன்னபடியெல்லாம் கேட்டவருக்கு அழைப்பு செல்லவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அவர் இதனால் மிக கடுமையாக அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதன்படி அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது. அவர் இல்லையென்றால் அவரின் மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பி ஆக வேண்டும். அதற்காகவாது கூட்டணியில் இருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அதிமுகவில் சேர முடியாது.
மன்னிப்பு கேட்டால் கூட சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி தரப்பும் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் முக்கியமான வேறு ஒரு கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒத்த கருத்து கொண்ட அந்த கட்சியில் சேருவதற்கான பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறாராம்.
தான் சேராவிட்டாலும் தன்னுடைய மகனை மாட்டுவது சேர்த்துக்கொள்வது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications