ஆபாசமாக திட்டுகிறார்கள்.. அசிங்கமான படம் போடுகிறார்கள்.. பேராசிரியை சுந்தரவள்ளி குமுறல்.. புகார்
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சுந்தரவள்ளி புகார் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "என்னை பற்றி ஆபாசமான வார்த்தைகளாலும், அசிங்கமான படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள். பாலியல் வழக்கில் கைது என்று போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமூக செயற்பட்டாளர் சுந்தரவள்ளி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பேராசிரியர் சுந்திரவள்ளி தமுஎகச அமைப்பின் மாநிலத் துணை செயலாளராக இருப்பவர். நிறைய டிவி விவாதங்களில் பங்கேற்று தன் கருத்தை ஆழமாக எடுத்து வைப்பவர்.

இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "நான் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக தளத்தில் பெண் விடுதலை தொடர்பாகவும், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என்னைக் குறித்து மிக இழிவான சொற்களைக் கொண்டு ஆபாசப் படங்களுடன் எனது முகத்தை ஒட்டி வன்மப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
நான் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் போலியான செய்தியை சிலர் பரப்பியுள்ளார்கள்.
எனது பொதுவாழ்க்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய செயலாக இது உள்ளது. போலியான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரவள்ளி, "இது என் மீது வைத்துள்ள தாக்குதலாக நான் பார்க்கவில்லை.. பொதுவெளியில் கருத்தியல் ரீதியாக பெண்கள் செயல்படுகின்றனர் அவர்கள் மீது வைக்கப்படும் தாக்குதலாக பார்கிறேன். ஆபாசமான வார்த்தையை வெளியிட்டது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என தெரிய வந்தும் கட்சி மேலிடத்தில் தகவல் தெரிவித்தும் இதுவரை ஒரு கண்டன செய்திகள் கூட பதிவிடவில்லை. தவறு செய்தவர்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவிக்க போகிறேன்" என்றார்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications