Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’சமூக நீதிக்காக’ உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆர். மகாதேவன் - என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட சமூக நீதி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் இடங்கள் காலியாக இருந்தன. இந்த நீதிபதி இடங்களில் ஒன்றுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும் பொறுப்பு தலைமை நீதிபதியுமான ஆர்.மகாதேவன் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம், மத்திய அரசுக்கு இந்த பரிந்துரையை அளித்திருந்தது.

supreme court tamilnadu

அப்போதே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த பரிந்துரையை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் பெயர், உச்சநீதிமன்றத்தின் ''கொலிஜியம்'' (நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழு) தற்போது காலியாக உள்ள இரண்டு நீதிபதிகள் இடங்களில் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது பாராட்டத்தக்க பரிந்துரையாகும். அனுபவம், சட்ட அறிவின் நுண்மான் நுழைபுலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், சமூகநல உரிமைக் கண்ணோட்டத்தோடு பல தீர்ப்புகளை வழங்கிடத் தயங்காதவர் என்ற பெயர் அவருக்குண்டு. எனவே விரைவில் மத்திய அரசின் சட்டத் துறையின் ஒப்புதல் - நியமனமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.

உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய திருப்பம் என்னவென்றால், முதன்முறையாக - சமூகநீதிக்காகவே இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் என்ற காரணமும் -சமூகநீதிப் பார்வைக்கும் மக்களின் கோரிக்கைக்கும் கிடைத்துள்ள வெற்றியின் வெளிச்சமாகும்.
''The Collegium said Justice Mahadevan was ''eminently suitable'' for appointment as a Supreme Court Judge. He belongs to a backward c ommunity from Tamil Nadu, and will bring diversity to the Supreme Court Bench.'' இதுதான் நம் அரசமைப்புச் சட்டம் வற்புறுத்தும் சமூகநீதிக் கோட்பாடு. ஒரு விடியலின் தொடக்கமாகவே நீதிபதிகளின் நியமனம் துலங்குகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என் கோடீஸ்வர் சிங், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நியமித்துள்ளார்.

அதாவது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற சமூக நீதிக் கண்ணோட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்ததை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழ்நாட்டின் ஆர்.மகாதேவன். இதனால் சமூக நீதி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+